பக்கங்கள்

திங்கள், 7 மார்ச், 2011

அன்பே!


என் வீட்டில் இறால் திருடி
இங்கு வந்து செரிக்க வைக்க
குந்தியிருக்கும் காகம் மறைத்து
கும்பிட்டு நிமிர்ந்து பார்த்தேன்
புத்தன் சிலையோ புன்னகைக்க
போதனையோ என்ன விலை ?

நான் இறந்து போய்விட்டால்
நாதியற்று புதைக்காவிட்டால்
காகம்தானே கடித்து உண்டு
கடமையினால் சடங்கை முடிக்க
கடவுளாக காகம் பார்த்தேன்
கால மதத்தினில் என்னுடல்
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!

சனி, 5 மார்ச், 2011

சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள் !


இருகண்கள் கனவு காண
இருள் எழுதிய இயற்கை தேர்வில்
பத்து விரலோ படிப்பை பார்க்க
பகுத்தறிவில் வெற்றியை உணர்ந்து
திறமையோ தீயை பிடிக்க
தீட்டினால் விலகிய இருளில்
மை மட்டும் மனதினால் எடுத்து
மாற்றத்தை சாதனையில் துவைத்து
இந்திய ஆட்சி பணித்துறையில்
இமாயலய பெருமையாய் உயர்கிறாய் !
உலகத்தை நீ பார்க்க வேண்டாம் ?
உன்னைத்தான் உலகம் பார்க்க வேண்டும் !
தன் தாய் கூறிய சொற்கள்,
தவறாமல் நிகழ்த்திய அருமையாய் !
கல்விக்கும் கண்தானம் படைத்தாய் !
காணட்டும் வரலாறு இது போல்

சனி, 5 பிப்ரவரி, 2011

தணியாத தாகம்


மனிதரின் கண்களில் ஊ(ற்)றி போனதால்
மாற்றத்தை ஆட்டுக்கு யார் புரிய வைப்பார் 

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இருகண்ணிலும் இரவின் விழிகள் அழி


மண்ணிற்கு கண்கள் வைப்போம்
மரணத்தில் கொண்டு வைப்போம் முடிந்தால்
மனிதர்க்கு மிச்சம் வைப்போம்
மாற்றம் இன்று கண்டுவைப்போம்

கண்தானம் செய்யலாமா ?


கனவிற்கு கண்கள் தேவையில்லை
கனலுக்கும் கண்கள் தேவையில்லை 

மணலெடுத்து முகம் கழுவினேன் மாற்றத்தில் காதல்


ஆற்றின் கரைகளில் யார் நான்தானடி
அடங்கா நீர் பெருக்காய் அலைவது இதுதானடி

காற்றின் தனிமையடி காதலும் தென்றலும்
காதோரம் பேசுவது ஞாபகத்தின் இனிமையடி

கொக்குவொன்று குறிபார்க்கும் குளமாக மனமாக
சிக்குவேன்று சிக்கிக்கொள்ளும் சாக துடிக்கும் மீனாக

நாரையும் சூரியனும் நாட்களுக்கு உயருதடி
நரையும் நானும் காதலுக்கு குறைச்சலாடி

தாவணியில்லாமல் தள்ளாடும் உன் கைதடியில்
ஆரணி வெள்ளமாய் அடங்கிப்போன மணலடியில்

சேரடியில்லாமல் பித்தவெடி உன் காலடியில்
சேர்ந்து கிடந்தது எனக்கு மாறித்தான் போகுமா

அப்போது காதலிலே ஆசைகளும் பலவுண்டு
ஆறுக்கு நீருண்டு அதைப்போல நீயுண்டு

கரைகளும் இரண்டுண்டு நம் கல்யாணம் போல் சேர்ந்ததுண்டு
கறையில்லா உள்ளம் வெல்லம் கற்கண்டில் தோற்பதுண்டு

நீயெனக்கு குழந்தையடி நினைவிருக்கா நாம் குழந்தையடி
நிச்சயம் நமக்கு புரியும்படி நீ பெற்றெடுத்தாய் நம்
குழந்தையடி

நீருக்குள்ளே மீன்குஞ்சும் நீ பெற்றெடுத்த நம் பிஞ்சும்
ஊற்றுகுள்ளே ஓயாது போலே  பாசத்தால் ஓடி நீயுதடி

பாரெல்லாம் கேட்குது கேள்வி பாடடி நம் பதிலை
நீரெல்லாம் மீன் குஞ்சு நீத்த நிறையத்தான் கற்றுகொடுக்க

அம்மா மீனும் அப்பா மீனும் ஆலோசனை கேட்டது நம்மை
சும்மாயில்லை சுவர்க்கம் வரை நீந்தி சொல்லிதந்தோம்  பாசத்தில் நீதி

தூண்டினில் சிக்கியது வயது தொலைத்து எத்துனை இன்பம்
தூளியில் தவிக்குது பழசு துணிச்சலாய் இருக்க நாம் பெரிசு

வலைகளில் வீசும் வாழ்க்கை வாரித்தான் போகுது நிலையை
அலைகளில் பேசும் கரையும் ஆழத்தில் மௌனத்தில் உறைய

கண்களும் கரையாய் மாறும் கண்ணீரும் ஆறாய் ஓடும்
காலம் மட்டும் மணலாய் மாற கைகளும் காதலை ஏந்தும்

முகம் கழுவ முதுமையும் தாங்கும் மூச்சுக்கு புதுமைதான் ஏங்கும்

நீ மட்டும் புதுமைதான் என்றும் நில்லாமல் நீயெனக்கு தொடர்பிறவி
தீமூட்டும் மணற்கொள்ளை கூட்டம் திருந்தாமல் பிரிக்குது நாணல் நம்மை


வியாழன், 27 ஜனவரி, 2011

புயாவின்* பிரிவு


கண்விழிக்காமல் தூக்கிவந்து
கதகதப்பாய் கோணியிட்டு
பசும்பாலை வயிறு முட்ட
பருக வைத்தேன் நீ வளர

கண்விழித்தால் முதல் தாயாய்
கண்டு வைத்தாய் என்னை மட்டும்
காலோடு தோள் ஏறி ஏணியாய்
காதோடு சேட்டை செய்தாய்

நாற்பது நாளில் விளையாடினாய்
நாங்கள் மறைந்தால் குரைத்து அழுதாய்
வெளிபட்டால் விரட்டி வந்தாய்
வீட்டு காவலில் மிரட்டி வைத்தாய்

எலி வலைகள் மோப்பமிட்டாய்
எதிரி தலைகள் விழ  குழி பறித்தாய்
மணி கட்டியே மாட்டை முடிக்கினாய்
மாமிசம் என்றே எத்தனை அடக்கினாய்

முள்ளு வேலியாய் காத்திருந்தாய்
எள்ளு சங்காயம் பொறுக்கிவந்தாய்
வேலை அத்தனைக்கும் போட்டி போட்டாய்
வினோத பாசத்தில் வெற்றி பெற்றாய்

பாம்பு ஒன்றை பார்த்துவிட்டாய்
பதறி பதறி ஊரை கூட்டினாய்
கம்பு கொண்டு அதை அடித்த ஊரார்கள்
கைதட்டினர் உன் கருணை கண்களுக்கு

சந்தைக்கு செல்ல ஊருக்கு போனேன்
சந்தடியில்லாமல் பின் தொடர்ந்தாய்
தெரு நாயெல்லாம் உன்னை விரட்டியே
தேட வைத்தன தன் உயிரையே

அத்துணை முறையும் வென்றுவிட்டாய்
அடங்கா பசிக்கு நான் தோற்று விட்டேன்
வாயும் நுரையுமாய் வழியில் நின்றாய்
வழி தவறி நானோ எங்கோ சென்றேன்

*புயா( பிறமொழிச்சொல் ): முதலை,
இங்கு செல்ல நாய் குட்டி  பெயரில்