பக்கங்கள்

திங்கள், 7 மார்ச், 2011

அன்பே!


என் வீட்டில் இறால் திருடி
இங்கு வந்து செரிக்க வைக்க
குந்தியிருக்கும் காகம் மறைத்து
கும்பிட்டு நிமிர்ந்து பார்த்தேன்
புத்தன் சிலையோ புன்னகைக்க
போதனையோ என்ன விலை ?

நான் இறந்து போய்விட்டால்
நாதியற்று புதைக்காவிட்டால்
காகம்தானே கடித்து உண்டு
கடமையினால் சடங்கை முடிக்க
கடவுளாக காகம் பார்த்தேன்
கால மதத்தினில் என்னுடல்
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!

கருத்துகள் இல்லை: