இலங்கைக்கு இரண்டு கண்கள்
இரண்டில் ஒன்று குருடு
இன்னொன்றிலோ கண்ணீர்
கண்ணீரில் தமிழ் மக்கள்
கண் குருடில் சிங்கள(ல) ங்கள்
கண்ணீர் விரைவில் நின்று போக
காலம் நெருங்கி வந்துவிட்டது
ஊன கண்ணும் ஒளி பெற
உரிய நேரம் வந்து விட்டது அது
ஒளி பெற்ற கண்களால்
உற்று பார்த்தது தன்நாட்டை
தமிழ் ஈழ நாடு தானே
தன்நாட்டை ஆட்சி செய்யும் நிலையினை
நினைத்துதான் பார்க்கையிலே
நேற்று செய்த தவறெல்லாம் நீண்டது
நிர்வாண பிணங்களிலும்
நிர்வாகமும் இராணுவமும் கற்பழித்ததும்
கற்பனையிலும் காணாதே தமிழ் ஈழம்
கைகொட்டி சிரித்த அந்நாளை
முள்ளி வாய்க்காளில் தமிழ் தாயின்
முந்தானை பிடித்து இழுத்ததையும்
பாஞ்சலியாய் இருந்த தமிழன்னையை
பார்த்து பரவச பட்ட பாரதத்தின்
முன்னாள் மன்னன் திருதராஷ்டிரன்
முடிவை எண்ணி பார்க்காத பட்சேக்களுக்கு
பரிசாய் பிச்சை பாத்திரத்தில்
பரிதாப பட்டு தமிழ் தாய் சில பருக்கைகளை போடும் போது - என்
தீர்க்க தரிசனம் நிகழ்ந்து விட்டதை எண்ணி
திரும்பிய திசைகளெங்கும் உரக்க கத்துவேன்
நான் தான்டா தமிழன் ..........!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக