பக்கங்கள்

வியாழன், 30 டிசம்பர், 2010

பெருமிதாம்தான் கைபேசி

மூன்றாம் தலைமுறை(3G) கைபேசி உன்னால்
முகத்தை பார்த்தே பேசி கொண்டிருந்தாள்
இரவு இனிதாய் முடிந்து போனாதால்
எனது கனவுகள் வருந்தியது பாவம்

புத்தாண்டு வரவேற்று வாழ்த்தலாம் நண்பர்களே

சித்திரை சேர்த்து இரு
சிறப்பு புத்தாண்டே வந்திடுக
சீரும் செல்வம் உண்மையெல்லாம்
சீக்கிரமாய் கொண்டு வருக
நோய் நொடிகள் பஞ்சமெல்லாம்
நுழைய வைப்பாய் மரணத்திலே
ஆய கலைகள் அத்துணையும்
அறிய வைப்பாய் எல்லோருக்கும்
அணுகுண்டுகள் ஆயுதங்கள்
அழிய வைப்பாய் அமைதியிலே
வெகுண்டு எழும் தீவிரவாதம்
வேரறுக்க வந்திடுவாய்

எழுத்தில் பல கவிதைகளை
இயற்ற  வைப்பாய்  புது கவிஞர்களாய்
அனுபவ கவிகள் அதிகமாய்
ஆற்ற வைப்பாய் தமிழ் பெருமைகளை
காதலுக்கு சாக வரமாய்
களைய வைப்பாய் சாதிமதம்
கல்லறை மட்டும் கடைசி காட்சியாய்
கையை காட்டட்டும் ஊழலுக்கும்

ஒற்றுமை தமிழனாய் உலகிற்கே
ஓங்கி உழைத்திடவே பல துறைகளிலும்
விஞ்ஞானம் என்பது விவசாயமாய்
விளையட்டும் கட்டிட தலைகளிலே
அஞ்சறை பெட்டியில் தங்கத்தை வைத்து
அடுப்பின் நெருப்பாய் உயர வேண்டாம்
மஞ்சளை போலவே முகத்தில் பூசி
மகிழ்ச்சியாய் சிரிக்கணும் வந்திடுவாயே
எல்லை புறத்தில் புறாக்கள் கூட்டில்
என்றும் பறக்கணும் அமைதி குஞ்சு

சந்திர சேற்றில் நடவு நடுவதற்கு
சந்திரயானில் என் பாட்டி பறக்கவே
ஆழிபேரலை வருமுன் காக்க, ஆன்மா
ஆழமாய் செல்லட்டும் நீர்மூழ்கியாக
சட்டம் என்பது சகலருக்கும் பொது
சமத்துவமாய் மாறட்டும் அதி விரைவாக
சேமிப்பு என்பது எங்களுக்கெல்லாம் உன்
 செல்லும் நாளின் அனுபவமாக

புத்தன் சொல்லோ உண்மையென்றால்
புலரவேண்டும் ஈழ விடுதலையென்று
பொறுமை காத்த இதயமெல்லாம்
பொழுது போக்கணும் புது கண்டுபிடிப்பில்
நண்பன் உறவு உலகமெல்லாம்
நான் விரும்பிய வண்ணம் வந்திடவே
அதற்கு வாழ்த்துகின்றேன் அதற்கு வாழ்த்துகின்றேன்
வருக வருக நீ வந்திடுவாயே

என்னவள்

அமாவாசையில்  பௌர்ணமி தேடி
அலைந்தபோது நான், நிலவு
பூத்து கிடந்தது தாமரையாய்
பூத்த தாமரையில் தேனெடுக்க
போய்கொண்டிருந்தது மிதந்து கொண்டு
தேனோ இதழில் தீண்டாமலே
திருமணத்தின் பிறகுதான் அந்த உரிமை
தெரிந்து கொண்டேன் அவள் யாரவள் ?

சின்ன பிள்ளைகள் கெடலாமா?

கஜூரஹோ* சிலைகளெல்லாம் போர்த்திகொள்ளும்
காலம் கெட்டுவிட்ட தமிழ் படத்தில் என்று சொல்லி
பிறந்த  குழந்தைக்கு கூட உடைகளை போட்டு
பிறகென்ன அம்மணமாய் ஆடுது திரை உலகு
*பிறமொழிச்சொல் 

என் கல்லறை கைகாட்டியில்

காதலித்து பைத்தியமா
கவலை படாதீர்  நண்பர்களே
மருத்துவம் உண்டு வாருங்கள்
மரணம் கொண்ட என் கல்லறையில்
"கல்யாணத்திற்காக காதலிக்காதே "
"காதலுக்காக கல்யாணம் செய் "
என் கல்லறை தொட்டு கலங்கி பார்
கசப்பாய் இருக்கும் காதலித்து பார்
இனிப்பாய் இருக்கும் இனிமேல்

புதன், 29 டிசம்பர், 2010

மத்திய பிரதேச* என் காதலி

போபால் போல கசியுமா
பூம்புனல் போலே புசியுமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

கன்னடத்து* என் காதலியே

குடிக்கும் நீரில் மறிக்குமா
குடகு போல குளிருமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

காஷ்மீர்* என் காதலியே

காத்திருக்கும் எல்லையா
கருணை மிக்க தொல்லையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

அருணாச்சல பிரதேச * என் காதலியே

அத்துமீறலின் ஆர்வமா
அடைய வைக்கும் இமயமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

அஸ்ஸாம்* என் காதலியே

ஆங்கிலோ பர்மா யுத்தமா
அருந்தும்  தேயிலை சத்தமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

தமிழ் நாட்டு என் காதலியே

தாமரை பூத்த தாவணியா
தமிழால் காய்த்த பௌர்ணமியா
உன் பார்வை

டெல்லி* என் காதலியே

பாலம் உடைந்த மானமா
பனியால் முடைந்த கானமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

குஜராத்* என் காதலியே

நானோ* காரின்*  ஓட்டமா
மானோ மயங்கும் வாட்டமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

பீகார் என் காதலியே

நச்சல்களின் காட்டமா
நறுந்தேனின் கூட்டமா
உன் பார்வை

மகராஷ்டிர* என் காதலியே

சிவசேனை சீண்டலா
சிக்க வைக்கும் தூண்டிலா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

என் இராஜஸ்தான்* காதலியே

குஜ்ஜாரின்* விருப்பமா
கொளுத்தும் பாலையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

என் ஆந்திர காதலியே

தெலுங்கானா தவிப்பா
தெரியாத கவர்ச்சி ஈர்ப்பா
உன் பார்வை

மலையாள என் காதலி

வர்ம அடியா
வசிய பிடியா
வலிக்கவுமில்லை
சலிக்கவுமில்லை
உன் கண்ணாலேயே

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இன்றைய தேதியில்

விக்ருதி வருடம் விளக்கம் சொல்ல
விரைந்து வருகிறதாம் புது வருடம்
மார்கழி பதிமூன்று மறந்து விட்டு
மகிழ்ச்சி  என்பதை எதிர் நோக்கி
காத்திருக்கும் மூன்று நாளுக்காய்
கவலை படுதாம் தமிழ் மூன்று

தலை குனிந்து இதைபார் தமிழா ?

மார்கழி கோலத்தில்
ஹேப்பி நியூ இயர்*

* பிறமொழிச்சொல்

திங்கள், 27 டிசம்பர், 2010

கைபேசியே உன்னுடைய தயவால்

என்னவள் இதயத்தில் இருந்தாலும்
உன்னுடைய தயவால்தான்
உதட்டோரம் முத்தமிட்டு கொள்கிறேன்
உன் முகப்பின் இரு முகத்திலும்

தமிழே!

மூன்றெழுத்து உன்னை முயற்சி செய்து
அழைக்கின்றாராம் ஆங்கிலத்தில்
அப்புறமென்ன தமிலென்று
ஆதியந்தம் இங்கிருந்து ?

கடவுள் தேடுவதை நிறுத்திக்கொண்டேன்

பரம் பொருள் பரம் பொருள் என்று
பசி எடுக்கும் வரை கேவி கொண்டிருந்தேன்

பரிந்து கொடு பொருள் பரிந்து கொடு பொருள் என்று
பணியில் இருந்து கொண்டு கேட்கின்றேன்

கர்மயோகத்தின் கடவுள் கருணை காட்டுகின்றார்
கடைசி தேதிக்கு பின் முதல் தேதியில் சம்பளத்தோடு
வணங்கிய  என் கை அப்போதே வயிற்றை தடவி வாழ்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டபோது

என்னுடைய கடவுள் எல்லோருக்கும் காட்சியளிப்பார்
இப்போதே கைகூப்புங்கள் கர்மத்தில்
என்று மட்டும் என்னால் கூற முடியும்

இதுதான் கடவுளின் உண்மை !

கடவுளின் கடைசி படைப்பு நான் தான்
ஒவ்வொருவரும்

இப்படிக்கு தொலை தொடர்பு

கைபேசியே, கணிபொறியுடன்
கள்ள காதாலாய்   செய்கிறாய்
மின்னஞ்சலை இடை மறித்து
மெலிதாய் அழுதுகொள்கிறது

மார்கழி கோலம்

எறும்புகெல்லாம் இனிப்பு
என்னுடையவளின்
கல் மா கோலம்

குறிப்பு : இது இருபொருள் பட புனைய பட்டது

அ)கல் மா கோலம்  - பெரிய  கோலம் கற்று
ஆ)கல் மா கோலம் - கல்லினுடைய மாவு கோலம்

சனி, 25 டிசம்பர், 2010

தாய்மை

மணிபுறா சூறை புதரில் கூடுகட்ட

மறைந்திருந்து இருமுட்டை கண்டுவிட்டு

தினம் சென்று பனை மரத்தில் கல்லெறிந்து

திடுகிட்ட புறா பறக்க முட்டை பார்த்து

இருபது நாளுக்கு மேலாய் இதை தொடர்ந்து

இன்னுமா குஞ்சு பொரிக்க வில்லை ஐயம் வர

ஓடிச்சென்று அம்மாவிடம் இதைகேட்க

ஒன்றுமறியா பிள்ளையெனக்கு என்ன சொல்வாள்

யோசித்தால் கூழைமுட்டை ஆகியிருக்கும்

உணரனுமாம் முட்டை தாய் சூட்டை தொடர்ந்து

ஆறிப்போன சூட்டால் முட்டை ஐயோ பாவம்

ஆறறிவு குழந்தை எனக்கு புரியவில்லை

அடுத்தமுறை சூறை புதருக்கு செல்லவேண்டாம்

அங்குதான் கண்கொத்தி பாம்பிருக்கு

மிரட்டி வைத்த பயத்தால் நான் செல்ல வில்லை

மீண்டும் புறா சவுக்கு கன்னில் முட்டையிட

தூரத்தில் பார்க்கும்போது தூங்கி கொண்ட

துறுதுறுத்த என்கண்ணில் புறா கனவு வர

அம்மாவிடம் சொல்லலாமா மனசு அலை பாய

அறுவடையில் இருந்த அவள் அருகில் செல்ல

கதிரறுத்த மெனைகளில்தான் காடை முட்டை கண்டு

கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்தாள்

கவிதை எழுத தெரியாத அப்போது?

புழுதி பொட்டலில் புது ஏரிக்கரையில்

அம்மாவிடம் கோபித்து அரவணைத்து கிடந்தேன்

தண்ணீர் அலைகள் தத்துவங்கள் பேசியிருக்கும்

நட்சத்திரம் முகம் பார்க்க நாங்கள் உயர்ந்தொமென்று

மலைபாம்பு சரசரத்து மனக்காம்பில் ஏறிக்கொள்ள என்

கோபமெல்லாம் குலை குலைத்து குறைக்கா நாயாய் கடித்துகொள்ள

இருந்தாலும் இறந்திடலாம் எனக்கங்கு இருட்டில்தான்

குளிர்வந்து கட்டிக்கொள்ள என் கூட்டிபிடிக்கும் முட்டியென்று

தவளைகள் இறக்கும்போது அதன் கர்ப்ப முட்டையும் கத்திகொள்ள

மீன் பிய்த்த ஒரு காலில் மெல்ல கவிச்சை அடித்து கொள்ள  

எரி நட்சத்திரம் கீழ்விழ என் எச்சிலை துப்புவதற்கு

வறண்ட தொண்டை வயிற்று நெருப்பில் கனைத்துகொள்ள

பனிரெண்டு மணி பார்க்க கைகடிகாரத்தில்

சலங்கை கட்டி பேய் வரும் காத்திருந்தேன்

சற்று தொலைவுக்கு வீரனார் விரட்டியிருப்பார் நினைத்துகொண்டேன்

மோகினியோ பாலகன் என்னை தவிர்த்திருக்கும்

முற்றும் துறந்த முனிவனாய் பயத்தின் தவத்தில்

கூட்ட நரிகள் சலசலத்து ஊளையிட

என் அன்னை விளக்குமாற்றால் எனை அடிக்க

காலையிலே கண்விழித்து எழுந்துவிட்டேன்

காலம் தான் மாறி போனாலும் , கரைந்து விட்ட

கரையினிலே தனித்து இருக்கேன்

கவிதையென இப்போதுதான்  கிறுக்கி இருக்கேன்

அக்கவிதை விரைவினிலே வெளியிடுவேன்

தியானத்தில் தொலைந்து போவோம்

தியானம் செய்வதற்கு மனம்  திரிந்து பறக்குதடி

தேடி தேடி கடைசியாய் தெரிந்து கொள்ளுதடி

அந்தி அங்கு அமர ஆழ்ந்து கொள்ளுதடி

அதுவரையின் கதிரவனை சூழ்ந்து  கொள்ளுதடி

தாமரை பூவோ மலர்ந்து கொள்ளுதடி

தன்னிலை மறந்து ஆசனம் கொள்ளுமடி

தண்டின் வளர்ச்சியிலே தலைதான் உயருதடி

தவழும் தென்றலங்கே பிரணயாமம் கற்றதடி

தேனீ மனம் சுற்றி சுற்றி திறந்து கொள்ளுதடி

தீண்டும் கிளைகளோ முத்திரை கொள்ளுதடி

உள்வெளியில் உச்சிநீரில் உண்மை தெளியுமடி

உயிர் வளியில் மூச்சின் முடிவின் அச்சம் குறையுமடி

எந்த பொருளும் பரம் பொருளாய் மகரந்தம் விரியுமடி

இருக்கும் தாமரை அத்தனைக்கும் சேர்க்கை நடக்குமடி

காலை பொட்டில் காட்சி பட்டு தெரிக்குமடி

காணும் ஆன்ம குயிலோ பாட்டும் படிக்குமடி

ஆனந்தம் ஆனந்தம் என்று ஆசை மலருதடி

ஆறறிவு எழுத்தாய் என் கவிதை நிறையுமடி

திங்கள், 20 டிசம்பர், 2010

வெள்ளைக்காரன் அம்மாவென்று !

கல்லறை கடைசியாய் மூடிக்கொள்ள
கலங்குது கண்களில் கண்ணீர் மெல்ல
அழுததின் அர்த்தங்கள் அவிழும்போழுது
அலாஸ்காவே* அலறுது அழிவில் கொள்ள
"இயாக்கின்"* மொழி இன்று இறுதி கூட
இறக்கும்போது மேரி ஸ்மித் ஜோன்ஸோடு*
அன்றுவரை இருந்துவந்த  அம்மொழியோ
அய்யய்யோ அய்யய்யோ  முடிந்து போனதே !

"கரைம்"* மொழி கலந்து விட்ட உயிர் மூச்சில்
காயத்தால் இதயம் மெல்ல இழந்து கொண்டு
ஆறு பேர் பேசிக்கொள்ளும் அவலத்தை
ஐந்தறிவு விலங்கு கூட புரிந்து கொண்டு
மனிதனால் இழந்து கொள்ளும் மொழியைபோல
மாற்றங்கள் வந்திடுமோ நம் மொழியில்
பேசியது பேர் ஆசையல்ல  அசையில்தான்
பிறகென்ன நமக்கெல்லாம் அசிங்கம்தான்

பத்து பேர் பிரிந்திருந்தும் பார்த்துகொண்டார்
பழம் மொழியாம் "விசிடா"* வின் விபரீதத்தை
அமெரிக்கா செவ்வாயிலே குடியேறி
அங்குள்ள மொழியெல்லாம் கற்று கொள்ள
நாசாவிலே* ஆராய்ச்சியை நடத்திவந்தாலும்
நன்றாயில்லை ஒக்லஹாமா* மாகணத்தில்
ஏனிந்த அவலமெல்லாம் விக்கிலீக்கில் *
இல்லாததையா சொல்லிவிட்டேன் மன்னியுங்கள்

கோவையிலே செம்மொழியோ குலாவியிருக்க  
கூட்டமெல்லாம் பந்திக்கென முந்தியிருக்க
செம்மொழியை சிண்டு பிடிக்க சிலர்மட்டும்
சீரழியும் திரைவரியில் தள்ளுபடியாய்
ஊழல் நிதியில் பொன்னாடை போர்த்துகின்றார்
உயர் மொழியாம் தமிழ் மொழியை வாழ்த்துகின்றோம்
இந்தியாவில் பேசப்படும்  196 மொழிகள்
இருக்கின்றதாம் அழிவினில் ஐ.நா இதைச்சொல்ல

பொறுக்கவில்லை என் மனம்தான் புயலாய் மெல்ல
புரட்டி போட்டு உயிரைத்தான் உலுக்கி கொள்ள
வழியில்லையே இலங்கையிலே அழிந்துபோன
வாழ்க்கையில்லையே தமிழுக்கென தெரிந்துகொண்டேன்
இதைபோன்றே எம்மொழியோ அழிந்துபோகும்
என் செய்வேன் என் செய்வேன் வழியென்னவோ?
உயிரைவிட்ட தமிழுக்காய் வீரமாமுனி போன்றே
ஒரு வெள்ளைக்காரன் உயிருடன் இருந்தால் எம் மொழி காப்பான்

 * பிறமொழிச் சொல்
குறிப்பு  : தினமலர் பொது அறிவை மையமாக வைத்து புனையப்பட்டது

வெள்ளி, 17 டிசம்பர், 2010

துரத்தி வருகுது கண்ணாமூச்சி இன்றும் தோழி !

சனி கிழமை தனித்திருந்தேன்
சாகசம் செய்வதற்கு துடித்திருந்தேன்
செங்கல்லை தேய்த்து மெழுகி
செல்லும் சாலையில் சாம்பலை தூவி
சக்கரமில்ல போக்குவரத்தை
சற்றும் நிறுத்தாமல் நடத்திவந்தேன்
தேங்காய் நாரை பிரித்து புனைந்து
தேடிவரும் குருவிக்கூடாய்
பாடி வரும் புது கனவுகள் அதில்
பறந்து போகாமல்  முட்டையிடும்
மண் சோறை சூடாய் ஆக்கி
மனதின் வாயினால் மென்று தின்று
தண்ணீரின் மண்ணை நிறைய
தலை கீழாய்  கவிழ்த்து கழுவி
சின்ன பாத்திகள் கீறி வைத்து
சிறிய புற்களை பிடுங்கி நட்டு
விவசாய வேலையும் சோம்பலில்லாமல்
விற்பனை மண் குவிய கடையிலும் தூக்கமில்லாமல்
கொட்டாவி விடும் குட்டி வயதில்
குலுங்கி வந்தாய் தனிமையை விரட்ட
பக்கத்து வீட்டு மகாராணியாய்
பகட்டே இல்லாத என்னுடைய தோழியாய்
வந்தவுடனே வாயடைத்து நின்றாய் என்
வல்லைமை திறமையை போற்றி நின்றாய்
மண் சாலையில் ஒரு குச்சியை புதைத்து
மறைத்து வைத்து விளையாட சொன்னாய்
எடுக்க முடியாமல் இருந்து விட்டால்
என் கண்ணை கட்டி விளையாட சொன்னாய்
கண்ணா மூச்சி விளையாட்டை நாமும்
கண்டு பிடித்தவனை காணமல் தேடி
அன்று முழுவதும் விளையாடி விட்டு
அழுக்கான சட்டையுடன் வீட்டிற்கு சென்று
அடிதடிகள் கொஞ்சம் வாங்கி
அழுது கொண்டு தூங்கியும் போனோம்
மறுநாள் விளையாட்டை தொடர
மண் மாளிகை கட்டிவைத்து
உன்னிடம் காட்ட ஓடோடி வந்தால்
ஓலை புது வீட்டில் உட்கார வைத்து
உனக்காக சடங்குகள் செய்தார்
ஒளிந்திருந்து பார்த்த என்னை
உன்னுடைய கண்கள் விரட்டி பிடிக்க
வெட்கப்பட்டு ஓடோடி மறைந்தேன் இன்றும்
விரட்டி வருகிறது பழம் நினைவுகள்

வியாழன், 16 டிசம்பர், 2010

ஏ நட்பின் துரோகியே ?

வாடா பூ நட்பென்றாலும்
வஞ்சிக்காதே அது தப்பு ?
வாடா போடா இதுதான்
என்றும் நட்பின் காப்பு !

என் காதலுக்கும் கண்ணில்லை !

கன்னங்கரிய நிறம்

காவியான பற்கள்

பரட்டையான தலை

படிப்பறிவில்லா தகுதி

உழைப்புத்தான் உடை

உடுத்திகொல்வதிலும் கடை

ஆனாலும் காதலியே

அவனைத்தான் காதலித்தாய்

அத்தனையும் துறக்க தயார்

அவனை பார்க்கும் முன்

அதை சொல்லியிருந்தால்

இப்போ இதை துறந்துவிட்டேன்

இன்னொருத்தி என்னை காதலிப்பாள்

அதுவும் இப்போ நடக்கவில்லை

அதற்கு பெயர்தான் காதல் தோல்வியோ !

அவசர பட்டு இறந்த என் காதலியே ?

அவசர பட்டு இறந்து விட்டாயே
ஆருயிர் என் காதலியே
கல்லறையிலாவது நம் காதல்
கவலையில்லாமல் சேர்ந்திருக்க
கண் காணாத தேசத்தில் நாம்
கண் மூடி இறந்திருக்கலாம்
உள்ளூரில் நீ இறந்ததால்
உன் நினைவால் நான் இறந்தாலும்
நம் கல்லறை கூட சாதி சண்டையில்
நடுங்கி  காதலில் இன்னும் பிரிந்திருகிறதே

செவ்வாய், 14 டிசம்பர், 2010

எனக்கொரு சந்தேகம் காதலி !

கனவிலும் இரவிலும் நான் இருப்பதால்
மலர்கள் மலர்வதை கவனிக்க முடியவில்லை
கவலை பட்டு கொண்டேன்

மௌனத்திலும் காதலிலும் நீ இருப்பதால்
இதழ்கள் மலர்வதை காண முடியவில்லையடி
கவலை பட்டு கொண்டேன்

இரண்டுமே மலரும்போது இதழ்கள்
இருக்கிறேனா தெரியவில்லை காதலி
முத்தமா முக்தியா தெரியவில்லை

திங்கள், 13 டிசம்பர், 2010

செய்னா நேவால் !

பாரதிக்கு புதுமை பெண்ணாய்
பரிசளித்தாய் நான்கு பட்டம்
பாட் மிட்டன்* பேசி மகிழ
பருவ குயிலாய் நீ படித்தாய்
இருபத்தி எட்டு ஆண்டு முடிய
இலக்கினை வீழ்த்தி விட்டாய்
முதலிடம் பெறுவதற்கு
முயற்சியும் தோற்றுவித்தாய்
முதல் சுற்றில் தோற்று போயும்
முந்தி கொண்டாய் இரண்டாம் சுற்றில்
மூன்றாம் சுற்றில் பதிலடியாய்
முன்பு தோற்று இருந்த ஆகஸ்டில் *
ஷிஜியன் வாங்கை தான்
சிதறடித்தாய் ஹாங்காங் தொடரில்
ஆனாலும் அம்மணியே
ஹைதரபாத் பெண்மணி போல்
என் கவிதை பொய்யாக்கி
இருக்க மாட்டாய் நம்புகின்றேன்
காலம் முழுக்க இரசிகனாய்
கவிதையில் வாழ்த்துவேன் புரிந்து கொள் !

* பிற மொழிச்சொல்

வருத்தமில்லை புரிந்து கொள் !

கெஞ்சுவது எமக்கில்லை
அஞ்சுவது தற்காப்பில்
மிஞ்சுவது பயத்தினால்
வஞ்சித்தது கீதத்தை

அரசியலின் தலைகளெல்லாம்
ஆடுது தஞ்சை பொம்மையாய்
புரியவில்லை காற்றின் திசையோ
பூக்குமே தமிழ் கீதமாய்

அகண்டவன் கண்ணிற்கு
இருண்டதெல்லாம் பெரும் பேயாய்
பிரிட்டனிலே பயந்ததெல்லாம்
பிடித்து விட்ட இலங்கை இரண்டு

அறிந்து  நீ தைரியமாய் இதை
அடங்கி சொன்னாய் சிங்களத்தில்
ஆணையில்லை எமக்கு தெரியும்
அறிவிலிகள் தெரிந்து கொள்ளும்

காற்று கூட உன்னை மிரட்டி
கடும் மூச்சில் எச்சரித்து நாம்
விடும் கீதம் தெளியவைத்து
விடுதலையை உரைத்திருக்கும்

நெடுநாளின் வேதனைகள்
நெல்லுகிரைத்த புல் நீராய்
ஊறி போன எம் இரத்தம்
உண்மை உதிர்த்தது பெருமையே

எத்துனை உயிர்கள் பலியிட்டோம்
ஈழ கடவுளுக்கு எங்கள் மனிதத்தை
அத்துணை வேண்டுதலும் பொய்யில்லை
ஆழ நடுகல்லின் அருந்தவத்தில்

யாழ் நூலகத்தின் ஒரு பக்கம்
எரியும் போது சொல்லி வைத்த
ஊழ்  உனக்கு புரியவில்லை
உருத்தி வந்தது கண்ணகியாய்

கீதம் எமக்கு இயற்ற தெரியும்
கீழ் வழிகள் எமக்கு வேண்டா
வாதம் உன்னுடன் எமக்கில்லை
வாழ்க்கை சிறக்கும் ஈழத்திலே

சிங்கள கீதமல்ல இது ஈழ தமிழ் தேசிய கீதம் !

முற்றும் சூழ் அலைகடல்
முடிவடையா பெரும் ஓசை
குறைவில்லா தமிழ் எனவே
கொடி நிமிர்த்தும் பரிதிக்கும்
காடு திறந்து வளி மிதந்து
காத்து நிற்கும் உயிர் மூச்சில்
ஓங்கி நிற்கும் வெயிலுக்கும்
உரத்து சொல்லும் மழைக்கும் எம்
பொன்னுடல் வியர்வை பூத்து
போற்றி நிற்போம் ஈழ பூமி


எதிரிக்கும் தர்ம வழியில்
ஈழத்தில் அமர வைத்து
போதிக்கும் பொற்காலம் கல்வி
புதுமை நூல்கள் செய்வித்து
எம் பூமி சட்டங்கள் என்றும்
இந்த உலகத்திற்கே வழிகாட்டும்
போர் வெறியில் பூவைத்து நாம்
பொறுமையிலே அணு உலகை
அறிவியலின் அழிவினைக்கு
ஆற்றலில் மாற்றி வைப்போம்


பொருளாதார பெரும் வேகம்
புரிந்து செல்லும் இலக்கிலே
பசி கொடுமை ஏழ்மையெல்லாம்
பகுத்தறிவின் தாழ்மையெல்லாம்
இல்லாதொழிக்கும் ஈழத்தாயே நீ
என்றும் வாழ வாழ்த்துகின்றோம் !
ஈழ தாயே வாழ்கவே! வாழ்கவே !
எம் தமிழ் தாயே வாழ்கவே ! வாழ்கவே !

சனி, 11 டிசம்பர், 2010

பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து !

ஒன்று இரண்டு மூன்று என்று (123  -வது)
உன் பெயரை பாரதி என்று
நாட்களுக்கு நாலு என்று
நறும் தமிழுக்கு நீயென்று
பதினொன்று இன்று மட்டும்
பனிரெண்டோடு சேர்ந்து கொண்டு
என் கவியை பாடும் போது
எனக்கும் மட்டும் பெருமை இல்லை
இரண்டாயிரத்து பத்துக்கும் சேர்த்துதான்
எங்கள் தமிழினமே வாழ்த்துகின்ற போது
இவ்வுலகமெல்லாம் உன்னை வணங்கி நிற்குதே

என்னுடைய பாரதிக்கு 123- வது பிறந்தநாள் !

பதினொன் கீழ்கணக்கு எங்கள்
பாரதியை பார்த்தது
பண்டைத்தமிழ் புகழையெல்லாம்
பரிசளிக்க சேர்ந்தது
பன்னிரண்டு திங்கள் எல்லாம் இந்நாளுக்கு
பார்த்து பார்த்து ஏங்கியது
ஆயிரத்தி எண்ணூற்றி எண்பத்திரண்டு
அவனிக்கே பூத்தது
அன்று முதல் சங்கம் கூட ஆதி
அலை கடலில் எழுந்தது
பரங்கியனை பார்த்த மீசை கூறாய்
பாட்டில்தான் கிழித்தது
பாரதப்போர் பெருங்காவியம் அவனால்
பாஞ்சாலியாய் சபதம் ஏற்றது
விடுதலைக்கோர் வேங்கையென வேட்டை
விடிவதற்க்காய் பாய்ந்தது
வெள்ளையனை ஓடிப்போ வெற்றி கவி
விரட்டி விரட்டி அடித்தது
கவிதை எழுதி காசு பேயை அன்று
கடுமையாக அழித்தது
காசுகூட கவிதை எழுத இன்று
கண்டபடி காமத்தில் குளித்தது
எத்தனை குயில்கள் உன்பாட்டை இன்றும்
இளங்காலையிலே படிக்குது
இப்போது கூட புதுகவிதை உன்னால்
ஏராளமாய் வடிக்குது
பசி கொடுமை பொறுக்காமல் பாரதி  நீ
பார் முழுதும்  அழிக்க சொன்னாய்
பரிதவிக்கும் தமிழனுக்கும் பிறர்க்கும் நீ
பாதையை  காட்டி சென்றாய்
பங்காளி முறைகளையும் பார்த்து நீ
பாசமாக நடக்க சொன்னாய்
புது ஆத்தி சூடி புனைந்து நீ
புகழ் பண்பை காட்டினாய்
பாப்பா பாட்டில் நான் கூட பழக  நீ
பக்குவ விளையாட்டை சொன்னாய்
இருபத்தியோராம் நூற்றாண்டு உன்னை எமக்கு
இவ்வாறு புகழ்ந்திருக்க
இருபதாம் நூற்றாண்டு என்றும் எமக்கு
பாவமாய் இருந்திடுமே
முண்டாசு கவிஞன் நீ முத்தமிழின் விளக்கு நீ
முடிவில்லை உனக்குத்தான்
மூர்த்தி கவிஞனாய் மீண்டும் வா

கருப்பு நண்பா உன்னை பழித்தால் !

இரவை ஒருநாள் ஓவியம் வரைய சொன்னேன்
இருட்டாய் அமாவசையென வரைந்து வைத்தது
கருமை கண்டுநான் கை கொட்டி சிரித்தேன்
கர்வ பட்ட என்னையே இரவு வெகுவாய்  கண்டித்து
ஓவியம் வரைந்து வண்ணம் உலர போட்டேன்
உற்று நீ கவனி பௌர்ணமியில் அது தெரியும்
குற்றம் உணர்ந்தேன் குறையும் கலைந்தேன்
இரவின் கனவிலே என்னை கூட மறந்தேன்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

மகனை உயிருடன் புதைத்த தாய்?

என்னை விதைத்த தாய்க்கு
எப்படி புரிந்ததோ தாய்மை
என்னை புதைத்த மண்ணே
இந்த சேயை வளர்த்து விடு
இனி பிறக்கும் குழந்தையெல்லாம்
என் போன்று ஊனமில்லாமல்
என் தாயை போன்று ஈனமில்லாமல்
தமிழ் மண்ணாவது என்னை திணித்து
தன் தவறை திருத்தட்டும்

கேரளமே உனக்கு மட்டுமா குறுந்தகடு விடத்தெரியும் ?

குறும் தகடு வெளியிட்டு
குளறுபடிகள் செய்வித்து
அணை நீங்கள் உடைத்திடலாம்
ஆவேசமாய் பேசிடலாம்
எதிர் கட்சியும் ஆளும் கட்சியும்
இணைந்து நீங்கள் நடித்திடலாம்
தமிழ் திரைப்பட வரலாறில்
தங்க கிழமை முதன் முதலாய்
வெளிவரும் இப்படத்தில்
விழிகளையே நாம் வைத்து
நடிகையெல்லாம் நீரில் மூழ்கி
நனையும்  ஆடை நீச்சல் அடிக்க
தெரிவதெல்லாம் வெட்கம் இல்லை
தெம்பாய் இருக்கும் காமத்திற்கு
முதல்வன் வரை மூழ்கி கிடந்தது
முதல் தேசிய விருதை வழங்கிடலாம்
கண்ணீர் கணை நாம் தொடுத்து
காக்கும் அணைக்கு போர் புரிந்து
ஒற்றுமையின் வெற்றியினால்
உருவாக்குவோம் நீதி மட்டும்
சதி கூட நீயானாய் தமிழா
நீதியாக நிலை மாறும்
எழுத்து பிழையில்லை என் கவிதை
எழுந்தவா 'நீ' 'ச' தியில் எழுதிடலாம்
சட்டத்திற்கு "ச" மட்டும்
சட்டென்று  நீதியுடன்  தீயினை சேர்த்திடலாம்

வியாழன், 9 டிசம்பர், 2010

சாமி கிடா ?

அம்மா என்னை ஆடு மேய்க்க
அனுப்பிவைத்தால் இன்றுமட்டும்
சொந்தம் ஒன்று செத்திருக்க
சோகம் என்று அவள் போயிருக்க
ஊரைவிட்டு நெடுந்தொலைவில்
உயரமான சவுக்கு தோப்பில்
தன்னந்தனியாய் தவித்தேன் ஆடுபோல்
தத்தளிக்கும் ஆட்டு குட்டி போல்

வெட்ட வெளியில் கட்டாந்தரையில்
விண் மட்டும் மானம் காக்க
வெள்ளாடு கால் நீட்டி விழுந்திருந்தது
வெடிக்கும் , இடிக்கும் தன் குரலோடு
வேதனை சொல்லி வைக்க
பனி குடமும் பல சொட்டு இரத்தமுமாய்
பரவசமாய் பெற்றது குட்டிகள்

தொப்புள் கோடி வெளியில் வர
தொடர முடியா மூச்சினாலே
பனிக்குடத்தில் செத்திடாமல்
பாலுக்கும் மூச்சுக்கும் சத்திடாமல்
ஆட்டுக்குட்டி துடிதுடிக்க
ஐந்தறிவு எனக்கு ஆறறிவாய் மாற
ஆசையோடு பனிக்குடத்தில் கைவைத்தேன்

பிசுபிசுவென கொழகொழத்து
மொசுமொசுவென முடி வளர்த்து
மூடிவைத்த உயிர் யுடலை
முழுவதுமாய் வெளிக்கொணர
கைவைத்து அகற்றி விட்டேன்
கர்ப்பபையின்  அமிர்தத்தை
கர்வம் எனக்கு வந்திட்டது

கால்களை நேர் நீட்டி
கால் குளம்பை நகத்தால் வெட்டி
முகம் முழுவதும் வழித்துவிட்டு
மூச்சு விட நான் வழி செய்து
நிற்க வைத்து பால் கொடுக்க
நினைத்த நானோ யோசித்தேன்
கொட்டாவி விடும்வரையில் தாய் குட்டியை ஈனுமே

பனி குடத்தை தின்றுதான்
பசிபோக்கும் தாய்மையை
பூனை போன்று குட்டி போட்டு
பொறுக்கா பசிக்கு தின்னாமலே
இன்னொரு குட்டியை அது ஈன
இந்த குட்டியை பரிசோதித்தேன்
ஆண் குட்டி தலை குட்டி

கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து
குட்டியை முன்போல் அறிந்திருந்து
தலை குட்டியை தூக்கிவைத்து
தாயுடனே சீம்பால் ஊட்டவைத்து
தொண்டை இரண்டுக்கும் காய்ந்திடாமல்
தொடர்ந்து இரண்டுக்கும் ஊட்டவைத்தேன்
நான் தன்னந்தனியாய் பனிரெண்டு வயதில்

இரண்டாம் நாள் என்னிடம்
இரண்டு குட்டியும் துள்ளியது
துக்க நாளை படைத்து விட்டு
துரிதமாக வந்த என் தாயோ
எந்தன் சமர்த்தை பார்த்துவிட்டு
என் ஆட்டிலே பால் கறந்து
காந்தி பாலாம் காய்ச்சி தந்தாள்

கடுமையாக முறைத்து பார்த்தேன்
கடைசி முறையென எச்சரித்தேன்
உறுப்புகொடி போட்டமுதல்
உணவருந்தா ஆட்டை பார்த்து
பெருமருந்து கொடியினை
பிடுங்கி வந்து நான் போட்டு
என் தாயும் ஆட்டு தாயே ...

குட்டி போல்தான் நான் கூட
கோபம் கொண்டதும் நியாயமோ
மூன்றாம் நாளோ மேட்டு மீதும்
முட்ட வந்தது என்னிடமும்
சில நேரம் என் விரலை
சீம்பால் என சூப்பியது
பல்லிலா அதன் வாய்க்கு
பரம சுகமாய் தித்திததாம்

எந்த நாளும் அது குளிக்க வில்லை
இருந்தாலும் அதன் உடல் நாறவில்லை
மனிதன் போல் அது உழைக்கவில்லை
மறந்தும் உழைப்பை அது பழிக்கவில்லை
புல் பூண்டை தின்று வைத்து
பொறுமையாக அசைபோட்டு
தன்னுடலை பெருக்க வைத்தது

தடவி முட்டி தூக்கி வைத்து
தழுவும் பொன்னுடலை பரிசித்து
எத்துனை முத்தம் கொடுத்திருப்பேன்
என்னுடைய இரண்டு ஆட்டு குட்டிக்கும்
முப்பது நாளில் கயிறு கட்டி
முட்டி போட்டு மேய வைத்து
காயை கூட அடித்து வைத்தார்
காலம் விரைந்து ஓடியது


கார்த்திகை மாதத்தில் காய்ச்சலோடு
கடுமையாய் வந்தது மஞ்சள் காமாலை
சித்த மருத்துவம் செய்து பார்த்தும்
சிறிதும் குறையவில்லை நோயின் தாக்கம்
அலோபதி வைத்தியத்தில் அதிகம் செலவழித்து
அப்பாவின் கடன் போல் நோயும் வளர்ந்தது
அம்மா மட்டுமே குல தெய்வத்திற்கு
ஆட்டு கிடா  பலி கொடுக்க வேண்டிக்கொண்டாள்
மஞ்சள் காமாலை எனக்கு குறைந்திட்டதாம்

சித்திரை மாதம் வந்தவுடன் சேதி
சித்திக்கும் சொந்ததிற்க்கும் சொல்லியனுப்பி
பூசாரி கிழவனுக்கு பாக்கு வைத்து
புது வேட்டி சட்டையும் எடுத்து வைத்து
மல்லிபூ மாலையில் அலங்கரித்து
மறு கையில் அரிவாளை ஆதரித்து
ஆட்டு கிடா அதை ஓட்டிவந்தார்

அவசரத்தில் அதை பலியிட்டார்
அறுசுவையென படைத்தும் விட்டார்
பாட்டில்கள் எடுத்து வந்தால் பாவம் வரும்
பதுக்கி வைத்திருந்தார் நாட்டு சாராயம்
போதை ஏற்றி சொந்தம் போயும் விட்டார்
புரியா நானும் கிடா கறி உண்டேன்
முடிந்து விட்டதாம் சாமியின் நேர்த்தி

மறுநாள் முழுதும் வயிற்று போக்கு
மரணம் ஆகிவிட்டார் ஒரு சொந்தம்
காரணம் ஆனது சாமி குத்தம்
காயை அடித்த கிடாவை வெட்டியதால்
எனக்கும் ஒன்றும் ஆகவில்லை
இன்னும் பலருக்கும் இப்படியே
ஆனாலும் சொந்தம் இதை நம்பவில்லை

என் ஆத்தா சாமியை நிந்தித்தால்
இனி ஆயுளுக்கும் கிடாவை வெட்ட மாட்டேன்
தப்பை திருத்தித்தான் தண்டிக்கவில்லை
தவிக்க வைத்ததாம் சாமி குத்தமாம்
மருத்துவ கல்வியை நான் படிக்கையில்
மறந்து போன இந்த பழம் நினைவு
எட்டி பார்க்குது சாராய குத்தமென்று
இருந்தாலும் சாமியை  நம்பனுமோ தெரியலையே ?

திங்கள், 6 டிசம்பர், 2010

அவினாசி ஆரியமே ..............

அன்றொரு நாள் அவினாசியில் நான்
அலைகின்ற பொது எதிரில் வந்தாய்
கருணாம்பிகை கோவிலுக்கு செல்ல
கடைசியில் மனது தியானத்தில் நுழைந்தது

சிலம்பம் தன்னில் என் விரல்கள் சுற்ற
சிவந்த இரத்தம் கையில் ஒழுக நானோ
சோமனூரில் குருவின் அடியில் அப்போது
சொல்லாத வலியை மறந்து விட்டேன்

செவ்வாய் இன்று காத்திருந்து
செல்லும் கராத்தே பொறுத்திருந்து
தொடைகள் மீது இடிகள்  வாங்கி இன்று
தொடர்ந்த அடிகள் தெக்கலூரில் இனிக்கும்

கணிபொறி வகுப்பிற்கு செல்வதற்கு
கருமத்தம் பட்டியை தேர்வு செய்து
அவினாசி என்னை அழைக்கும்போது
அப்படிதானே இன்று வந்தேன்

முதல் நாள் வகுப்பில் மாணவனானேன்
மறு நாள் வகுப்பில் ஆசிரியனானேன்
கணணி அனுபவத்தில் காலம் என்னை மாற்றி
காசுக்காக கடமை என்னை சுற்றியது

முந்தி கொண்ட மாணவி நீயாய்
மூச்சு நிற்கும் ஆரியத்தின் சேயாய்
தாவணி தவிர்த்த நவீன அலங்காரத்தில்
தங்க தேராய் என் முன்னால் வந்தாய்

தியானம் பழகு தினமும் இறைவன் ஒழுகு
மயானம் செல்லும்வரை மாற்றாதே பண்பு
விவேகானந்தனும் ஓஷோவும் விளக்கிய வழியில்
விட்டா நகர்வேன் உன்னை உதறி ......

கருணாம்பிகை கோயிலுக்கு சென்றேன்
கண் மூடி தியானத்தில் நுழைந்தேன்
வரும் போது உருத்திராட்சை வாங்கி
வலது கையிலும் கட்டி கொண்டேன்

அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தாய்
அடிப்படை கணினியின் ஆசிரியன் நானோ
அழகே உன்னை மனதினால் தவிர்த்து
இகழா கண்ணினால் என் வகுப்பை தொடர்ந்தேன்

வளையல் ஓசை உனது தாளம் தட்ட
அலையும் காகிதம் குறிப்பேடு அடிகள் எடுக்க
கொலுசு சத்தம் குலுங்கி சிரிக்க
குறும்பாய் நீயோ என் பெயரை பழித்தாய்

காதல் வந்து இதய கதவை தட்ட
கனவு வந்து உயிர் பூட்டை யுடைக்க
இருண்ட வாழ்க்கை திரண்டு ஒழிக்க
என்னை ஏனடி எரிக்க வந்தாய்

பார்த்தவுடனே பளீரென சொன்னாய்
பள்ளி பெண்ணானாலும் தைரியமாய் கொன்னாய்
ஆசிரியன் முறையால் நான் அறம் பிறழாமல்
ஆரிய பெண்ணை உன்னை மறுத்தேனே

மறுநாள் நானோ மனதினால் செத்து
மாற்றலாகி நான் ஓடி வந்து விட்டேன் என்
தடம் பார்த்து நீ வந்தால் புரியும்  நான்
தவிர்த்தது உன்னை மறந்து எதனால் தெரியும்
தலைமை நீதி மன்றத்தின் நீதியும் அறியும்  .

மல்டிமீடியா* காதலியே

போட்டோஷாப்பில்*  செதுக்கி வைத்த
பொன்னான முகத்தழகி
கோரல் டிராவில்* கிறுக்கி வைத்த
கொடியிடை இடுப்பழகி
பெஜிமேக்கரில்* நிரப்பிவைத்த
பேசுகின்ற சொல்லழகி
அடோப் ப்ரிமியர்* ஆட்டிவைக்கும்
அருமையான பட்டழகி
பிளாஷ் அனிமேஷன்* துள்ளவைத்த
பெருமைமிகு நடையழகி
இல்லுஸ்ரேட்டர்* வரைந்து வைத்த
இணையான புருவழகி
வைரஸ்* மட்டும் என் இதயமென
வருந்த வைக்கும் காதலியே
காஸ்பர்ஸ்கையாய்* வந்திடடி உனக்காக
காத்திருப்பேன் காலம் முழுதும்            

*பிற மொழி சொல்    

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நட்பு தப்பு

உதிரம் பூ என்றேன் நான்
உதிரும் பூ என்றான் அவன்
நாங்கள் கூறிய பூ நட்பு !
நீங்கள் கேட்கலாம்
இது தப்பு ?
நினைத்து பாருங்கள்
தமிழனுக்கும் சிங்களவனுக்கும்
நடப்பில் உள்ள பூ
உதிரும் பூவா உதிர பூவா ?

வியாழன், 2 டிசம்பர், 2010

அதிகாலை சூரியன் என் கவிதை திருடினால் ?

பௌர்ணமி  நீ .............
அமாவாசை நிலவுக்கு
அதி காலை சூரியன்
எழுதிய கவிதையை
நான் திருடி விட்டேனாம்!

அழுது கொண்டிருந்தது
என்னிடம் அது இரவில்

நான் அதை சமாதானம் செய்தேன்
நாளைக்கு நீ கவிதை எழுது
நான் கவிதை எழுதாமல்
என் காதலியை உன் கவிதை
பார்க்க சொல்கிறேன் என்றேன்

பிறை நிலவு சிவந்து கொள்கிறதாம்
பெண்ணொருத்தி நாணம் போல
சூரியன் எழுதிய கவிதையை
இன்று நான் சொல்லிகொண்டேன்
நான் எழுதிய கவிதை எது

காதலி கனவை விட நீ பொய்யடி

இரட்டை  செம்பருத்தி ,பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பூக்கிறது .

இரவின் நட்சத்திரம், பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பிறக்கிறது.

நேற்றுதான் அமாவசை என்றாலும் நிலவு
நிகழ்த்தி விடுகிறது பௌர்ணமியை இன்று .

நடுக்கடல் அலையாய் பெண்ணே அது
நமக்காக கரைகளில் மோதாமல் இருக்கிறது.

குளிர் கூட தென்றலுடன் கோபித்து
கோடையின் நெருப்போடு குலாவி கொண்டிருகிறது
!
இப்படிதான் இன்றைய நாளில்
எனக்கும் உனக்கும் திருமணம் நடைபெறுகிறது!


நம் காதல் உன்னால் தோற்று போனால் கூட
என் கனவில் இதோடு எத்தனையோ முறையாய் ?

ஆனால்
உன்னை விட என் கனவு உண்மையடி

நாம் பிரிந்தாலும் நம் காதலை அது பிரிக்கவில்லையடி

நான் எனக்காக கல்லறை கட்டும்போது கூட
என் கனவை நினைத்து
உனக்காக திருமண மண்டபம் கட்டி கொள்கிறேன்

அங்குதான் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமென்று

இந்த கவிதை பத்திரிக்கை கிடைக்கும்போது
கவனமாக கனவின் விலாசம் தேடி வந்து விடு

பாசி படித்துறை நண்பனே

விரால் பிடிக்க தூண்டில் போட்டோம்
விடிவதற்குள் சென்று பார்த்தோம்
தூண்டில் அங்கு காணவில்லை
தொலைவில் எங்கும் அது தெரியவில்லை

நண்பா நமக்கு தோல்வியாச்சு
நம்ப தூண்டில் மாயமாச்சு
இன்னொரு மீன் பிடிப்பதற்கு
எனக்கும் உனக்கும் ஆசையாச்சு

மீன் பிடித்தால் தரித்திரம் என்று
மீசை சித்தப்பா நமை  அடித்த போது - நாம்
வெட்டிய குழிநீரில் விட்டு விளையாடுவதற்கு
விராலின் மீதுதான் ஆசையாச்சு

வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு
வேறொரு தூண்டிலோடு வருகிறேன்
கால்கள் உனக்கு பேருந்தாய் மாற
கைகள் உனது ஓட்டி சென்றது

அங்கு மட்டும் நான் தனியாக அமர்ந்து
 அழுது கொண்டே ஆழ குளத்தினை பார்த்தேன்
நண்பா நம்  தூண்டில் இழுத்து கொண்டு
நடு ஆழத்துக்கு விரால்  மீன் செல்வதை கண்டேன்

கால் சட்டை கழட்டி கல் ஒன்று வைத்தேன்
கரணம் அடித்து தண்ணீரில் குதித்தேன்
தூண்டிலின் தக்கையை துழாவி பிடித்து
துறு துறு வென இழுத்துவந்தேன்

பாய்ந்து படியேறி பார்க்கின்ற போது
பாம்பு ஒன்று பெரிதாக மாட்டிகொண்டிருந்தது
பச்சை காட்டாமணகால் அடித்து கொன்றேன்
பாம்பு விழுங்கிய முள்ளை எடுக்க நினைத்தேன்

சாலையின் ஓரமாக படுக்கவைத்து
சற்று நெளிவது போன்றே செடியில்
தலையை மறைத்து வைத்தேன் ஊர் எல்லையில்
தண்ணீர் பாம்பு என்று தெரியாதிருக்க

பேருந்து சென்றால் நசுக்கி விடும்
பிறகு நாம்தான் முள் எடுக்கலாம்
கணக்கு ஒன்று கண்டு வைத்தேன்
காட்சி வேறாய் மாறி போனது

ஊருக்கு புதுசாய் வந்தவன் ஒருவன்
ஓட்டிவந்தான் இருமாட்டை கையோடு
தண்ணீர் பாம்பை கண்ட மாடுகள்
தலை தெரிக்கவே மிரண்டுதான் போயின

ஓட்டம் பிடித்தன ஊரைவிட்டு ஓடின
ஓட்டிவந்தவன் கீழ்விழுந்து எழுந்தான்
உற்று பார்த்தான் செத்த பாம்பைதான்
ஒருவழியாக தன்னை தேற்றினான்

போட்டு வைத்தவனை 'பொறம்போக்கு' ஏசினான்
போடா நீதான் மனதிற்குள் ஏசினேன்
மாட்டை பிடிபதற்க்கு மான் வேகம் ஓடினான்
மறைந்திருந்த நானோ வீரனாக வந்திட்டேன்

மாட்டை பிடித்துதான் அவன் பெயர்
மகராசன் மீண்டும் வந்திட்டான்
மறைந்து கொள்வதற்காய் மறுபடியும் ஓடினேன் 
மரத்தின் பின் நின்று மனகிளர்ச்சி கொண்டிட்டேன் 

இரண்டு மாட்டையும் சேர்த்து பிணைத்திட்டான் 
எதிரில் இருக்கும் வேரடியில் இழுத்து கட்டினான் 
நாற்றமடிக்கும் வயிற்றை பிடுங்கும் நடந்து செல்வோருக்கு 
நல்லது செய்வேன் என்று பாம்பை அவன் தூக்கிட்டான் 

செட்டிகுட்டையின் சூரை முள் புதரில் 
சென்று அவன் வீசிட்டான் பாழடைந்த கிணற்றில் 
பதறி நான் போனேன் பதுக்கி இருந்தே 
பயித்தியம் பிடிக்குமென வேறோர் வழியில் சென்றேன் 

இடையில் இருந்த பனைமரத்தை பார்த்திட்டேன் 
எனது தலையினில் மெல்ல நான் கை வைத்தேன் 
வலிக்கும் பஞ்சை நான் வருடியும் பார்த்தேன் 
வடிந்த இரத்தத்தை கொஞ்சம் நான் யோசித்தேன் 

பனைங்கொட்டை பொறுக்கி பந்தை நாம் அடித்தோம் 
பார்த்த மட்டைபந்தில் சச்சினாய் நடித்தோம் நீ 
அடித்த பந்து ஆறுக்கு பறக்காமல் நேற்று 
ஆவேசமாக என் மண்டையை பிளந்தது 

ஆவென்று அலறி துடித்தேன், ஆருயுர் நண்பனே 
ஆபத்தை உணர்ந்திட்டாய், ஆடை அவிழும் கையென  விரைந்தாய்
கோரை பிடுங்கி நீ கொட்டும் என் இரத்தத்தில் நான் 
கோபப்படுவேன் என்று நீ அழுது அதன் சாற்றை ஊற்றினாய் 


வேறு வழியில்லாமல் வீட்டிற்கு சென்றேன்
விளக்கமாக அம்மாவிடம் சொன்னேன்
திருட்டு மாங்காய் அடிக்க வந்தவன்
தெரியாமல்தானே என் மண்டையை உடைத்தான்

தப்பு செய்தது நாங்கள்தான் என்றாலும்
தகப்பனிடம் சீக்கிரம் வரச்சொல்லி அனுப்பினால்
எங்கப்பன் என் விளக்கத்தை நம்ப மறுத்தாலும்
என்னை அழைத்து மருத்துவனிடம் சென்றார்

அன்று மாலை நீதான் வந்தாய்
அழுது அழுது உன் கண்கள் வீங்கியே
உன்னுடைய கைகளில் உரிக்காத ஆரஞ்சு
உரிக்க கொடுக்க வாய்த்த தப்பிலாத நட்பு பிஞ்சு

அன்று இரவே மீன் பிடிக்க நினைத்தோம்
அடுத்த நாள் விடுமுறைக்கு நான் விளையாடலாம்
அழைத்தாய்
ஆயிரம் குஞ்சுக்குமேல் ஆணும் பெண்ணுமாய்
அடர்த்தியான தாமரையில் உலங்கு வானூர்தியாய்

ஏரியில் இருந்த விராலை பிடித்து வந்து
எங்கள் தங்க சுரங்க கேணியில் வளர்க்கலாம் என்று
தெற்குதெரு மின் விளக்கில் தெரிந்து கொண்டு
தெரியாமல் போட்டு வைத்தோம் தூண்டில் ஒன்று
...............            .......................           ........................
சூறை முள் புதரில் தேடிபார்த்தேன்
சுத்தமாய் அங்கு பாம்புமில்லை
அடி ஆழத்திற்கு அது சென்றிருக்கும்
ஆற்றாமையினால் வருந்துகின்றேன்

நண்பா நீயோ உன் அம்மாவிடம்
நான்தான் மண்டையை உடைத்தேனென
ஐம்பது பைசா காசு வாங்கி அருமை நண்பன் எனக்கு
அதற்கான மருந்தென தூண்டில் வாங்கி ..........


பாம்பு கிடந்த சாலையில் பார்த்தேன்
பாதி மண்ணில் ஐம்பது காசு கிடந்தது
அவன் விழுந்து எழும்போது அந்த காசு
அவன் அறியாமல் விழுந்திருக்கும்

கீழே கிடந்த ஐம்பது காசுக்கு
கெண்டைமீனின் தூண்டில் வாங்கி
படித்துறையில் நான் போடும்போது
பதுங்கி வந்து என்னை மிரள வைத்தாய்

என் கையில் ஐம்பது பைசாவை கொடுத்து
இன்னொரு தூண்டில் வாங்கி வரச்சொன்னாய்
நான் கையில் வைத்திருந்த தூண்டிலை வாங்கி
நடு தண்ணீரில் போட நீ முயற்சி செய்கையில்

பாசி உன்னை வழுக்கியது
படித்துறை உன்னை தள்ளியது
மூங்கில் ஊறவைத்த கட்டைக்கு
மூழ்கி விழுந்துவிட்டாய் என் செய்வேன்

பத்து  வினாடிகள் சென்றிருக்கும்
பருத்த விரால் மீன்  நீ விழுந்த இடத்தில்
பக்கத்தில் வந்து சென்றதே
தண்ணீர் எல்லாம் சிவப்பாய் மாறி

தத்தளிக்கும் உன்னிடம் சூழ்ந்து கொள்ள
தண்ணீரில் நீயும் மூழ்கி போனாய்
தாவி  நான் தொண்டை  கிழிய கத்தினேன்
தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தனர் கூட்டம்

உன்னை அவர்கள் தூக்கும் போது
உதிரம் ஒழுக கரையில் போட்டார்
உயிர் நிலையில் மூங்கில் குத்தியதால்
உயிரைவிட்டு என்னை விட்டு இறந்து போனாய்


இறந்த பிரிவு ஆறுவதற்குள்ளே
இடியாய் என் மேல் பழியும் வந்தது
மண்டையை நீ என்னை உடைத்து விட்டதால்
மனதில் வெறி கொண்டு தள்ளி விட்டேனாம்

இறக்க வைத்ததும் என்னுடன் கொண்ட நட்பால்
என்னருமை நண்பனே எழுந்து வந்து சொல்லேன்
உன்னால் எப்படி உண்மையை சொல்ல முடியும்
உறுத்தி இருக்கலாம் உன்தாயின் புலம்பல்

தூளி கட்டியே தூக்கி போனார்
தொங்கும் சோகத்தை ஆட்டி நீ போனாய்
உன்னை புதையலாய் புதைத்து விட்டார்
ஓடி வந்து விட்டேன் அலிபாபா போலே

என்னை இழுத்து என் தாய் சென்றாள்
என்னிடம் சொன்னால் நீ பிடித்து கொள்வாய்
ஆனாலும் நண்பனே அன்று முதல்
அவதி பட்டேனே நீ பிடிக்க வில்லையே

சுடுகாடு வந்து செல்லும் தென்றலும் சுட்டது
சோகத்தோடு வந்து செல்லும் என்னிடம் கேட்டது
சுத்த நட்பு எப்படித்தான் செத்து போனது தெரியல
சொர்க்கம் செல்லும் நரகத்திலே சுவடும் யாருக்கும் புரியல .........................







திங்கள், 29 நவம்பர், 2010

காதலி தெரியுமா உனக்கு ?

நீ நடந்து போகும் காலடி வழியே ,
நான் கடந்து போகும் போதுதான்
உன்  காலடி இனிப்பில் உணவருந்தும் எறும்பு
உரக்க உயிர் விடும் போது சொன்னது
என் காலடி பட்டு நசுங்கி
இன்று நான் நாளை நீ !


அப்போது தெரியவில்லை அதன் மொழி
இப்போது புரிந்து போகிறது
கல்லறை தனிமையில் கைநீட்டி என்னிடம் அந்த
 எறும்பு சொல்வதால்
இனிக்க வாய்த்த உன் காலடியும்
என் இதயம் துடிக்க வாய்த்த இறுதிஉன்  சொல்லடியும்
இரு உயிர்களை பறித்து விட்டதடி

சனி, 27 நவம்பர், 2010

பிளாட்டின பதக்கங்கள் பேசியது ஆசிய கபடியில் அந்த அலை வீசியது !

நாங்கள் வெல்வதற்காக ,
நீங்கள் தோற்கவில்லை !
நீங்கள் விளையாடுவதற்காக,
நாங்கள் வெற்றி பெற்றோம் !

ஈரானோடு மோதியதால் நாங்கள்
தங்கம் பெறவில்லை ,
வைர மண்ணில் கபடி தினமும்
ஊறியதலேயே நாங்கள் தங்கம் வென்றோம் !

ஆறு முறை ஆசிய விளையாட்டிலும்
தொடர்ந்த தங்கம் இது  இல்லை  பல
நூறு யுகம் பேசிய மற விளையாட்டின்
சொச்சம் தான் இது

நண்பா ! உன் அங்கம் தொட்டு ,
இந்த தங்கம் வென்றாலும் நம்மை
பங்க படுத்தும் தேச பிரிவுக்கும்
கபடி மூச்சிலும் ,கடைசி வீச்சிலும்
காப்போம் சகோதரத்துவம் !

இந்தா எங்கள் ஆறு தங்க பதக்கமும் ,
அதோடு மகளிர் பதக்கமும் ஏழும் வைத்துகொள் !
மற விளையாட்டு மட்டும் இருந்தால் போதும்
எங்கள் மண்ணையும் பொன்னாக்கி
மாட்டிகட்டுவோம் உங்கள் கழுத்தில் பதக்கமாக!

"நீ" "தீ"யும் நீதியும்

"நீ"    "தீ" ஆனதாலே
நீதி கூட தலை வணங்கி 
நிற்கிறதே நின் சிலைக்கு 
" முத்துக்குமார் "

தீதகற்ற தீ குளித்தால் முத்துக்குமார் நீ ஈகை இயற்ற உடல் அவிழ்த்தால் ?

முத்துக்குமார்
உன் பெயரை சுமந்தால் கூட
அவமானம் என்று நினைத்த
நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்
என் கவிதை எரிவதை பார்த்து
கைகொட்டி சிரித்து கொள்கின்றன
அவைகளுக்கு தெரியுமா உன்னை
போலவே என் கவிதையும்
தீகுளிக்கிறதே தமிழனின்
அவமானத்தால் என்று

உடல் ஈகை வள்ளல்

பல்லவன் சிலை கண்கள் கூட  உன்னை
பார்க்க துடிக்குதடா !
நல்லவன் சிலை உன்னை காண அது 
நடந்து வந்ததடா !
சாக்கடை தலைவன் அரசியல் சிலைக்கு உன்னை 
சகிக்க முடியலைடா!
காகம் தலையில் கழிந்தால் கூட அதற்கு 
கண்ணை மூட தெரியலைடா!
இமய மலையும் பாறை பெயர்த்து உன்னை 
ஏற்றி சிலையில் வைக்குமாடா !
எட்டப்பன் சிலைகள் இருந்தா உனக்கு 
ஏளனம் செய்யுமாடா !
காவல் சிலைகள் கையை மூடி நிர்வாண 
குற்றம் மறைகும்டா !
சட்ட சிலைகள் கையை கொடுத்து உன் 
சாவின் நீதி அழிக்குமடா !
முத்துக்குமார் சிலைகள் என்றால் தமிழ் சங்கம் 
முழங்கி எட்டு திக்கும் ஒலிக்குமடா !
சிங்களங்கள் சிலையாய் மாறி சித்தம் கலங்குதடா உன் 
சிறப்பை நொந்து தீயை மூட்டி அது ,
சீக்கிரம் செத்து அழியுமடா !
ஈழம் சீக்கிரம் எழுமடா, உடல் ஈகை வள்ளலடா உன் 
சிலை போரை முடிக்குமடா !





வியாழன், 25 நவம்பர், 2010

பள்ளித்தோழி

எச்சில் பண்ணி நீ கொடுத்த
இனிப்பு இன்னும் தித்திக்குதடி
எங்கிருந்தாலும் நீதான் நினைப்பாய்
எத்தனை காலமும் அது கரையாதுடி

குரங்கு மூஞ்சை அழகாய் காட்டி நீ
கோலம் போட்டாயடி முகத்தில்,
எந்தன் முகமோ உந்தன் கண்ணின்
கண்ணாடியில் இப்படியா மாறுமடி

பாவாடை சட்டை போட்டு வந்த நீ
பறிக்கா முல்லையடி நான்
பழிச்சா போதும் என்னை சுற்றும்
கொடி பாம்பின் தொல்லையடி நீ

ஆணும் பெண்ணும் பேதமில்லா நித்தம்
அன்பில் மிதந்தோம்மடி ஆற்று நீரில்
நீந்தி நாமும் சின்ன மீன் பிடித்தோமடி
செத்த மீனை பாடை கட்டி எரிச்சு வைசோம்மடி

சிலந்தி வலையில் சிக்கிகொண்ட உன்
காலுக்கு செய்து போட்டேனடி
சின்ன சின்ன பூக்கள் கோர்த்த
சிறப்பு கொலுசு அது தானடி

நாயுருவி வித்தை காட்டி யுத்தம்
செய்தால் இரத்தம் கொட்டுமடி
என் நெற்றியில் வைக்கும் வீர பொட்டாய்
உன் விரலோ சுட்டுமடி  என்னை

என்  மனைவிக்கும்  உனக்கும்
பிறந்த குழந்தைகள் இப்போ
கணினியில் ஆடுதடி அதில்
கணினி வென்றால் என்
கன்னத்தில் அது கை வைத்து
கலங்கி போகுதடி

நம் நட்பு தோற்றகதையை
சொல்லி இப்படி சிரிக்க வைசேன்டி
இந்த காலம் தோற்று
நம் குழந்தையோடு நம்மை
மீண்டும் விளையாட வைக்குமாடி

வளமான வாழ்வுக்கு

தாலிக்கு இரண்டும்,
மூன்று முடிச்சு போடுவதெல்லாம்
முடிந்து கொள்ளட்டும்
ஒரு குழந்தையோடு


குறிப்பு :(இரண்டும் :ஆணும், பெண்ணும் )

உன் காதல் தேர்வில் ?

கரும் பூக்கள் காட்டி வா உன்னை
காதலிக்கிறேன்  என்றாய்
உன் இரு பூக்களை காட்டி கண்ணே
உன்னுள் ஒட்டி கொண்டேனடி
என்னை இதயமாய் இரசித்தாயடி

காதலுக்கு கண்ணில்லை


கரும் பூக்கள் கொண்டு வா
காதலிக்கிறேன் என்றாய்
இரு பூக்கள் என்றே உனக்கு
என் கண்ணை எடுத்து விட்டேன்டி
நான் உன் மேல் கொண்ட காதலால்

காதலி என் இதயம் எடுத்து உன் கணவனுக்கு வை நம் காதல் தோற்காது !

இறக்கும் முன்னே எழுதி வைத்தேன்
இன்னொரு உயில் கவிதை என்
இதயம் எடுத்து உன்னுடையவனுக்கு
பொருத்திவிடு  எனக்கு அதுபோதும்
உனக்கு கூட காதல் பழியில் உயிரும் நோகதடி
உன் கணவன் கூட நம் காதலில் உச்சி குளிர்வான்டி

காதலி போதை ஏற ஏற நான் போட்டு உடைப்பேன்டி

போதை ஏற ஏற நான்
போட்டு உடைப்பேன்டி
நான் போகாத கல்லறைக்கு
உன் இதய கல்ல சுட்டு வைப்பேன்டி

அரைச்ச சந்தனம் நெற்றியில் பூசி நீ
அழகை கூட்டி வைச்சவடி அப்போ
ஆண்கள் எல்லாம் பயித்தியம் என்று
இப்போ பேசி சிரிச்சவடி

கைபேசியில் தவறிய அழைப்பை
தினமும் தந்து தவிக்க வைச்சவடி
இப்போ புறம் பேசி விட்ட காதலுக்கு
என் தலைஎழுத்த கிறுக்கி வைச்சவடி

நான் சேர்த்த காசு உன்
சேலை சொல்லும் அது
தூக்கு மாட்டிகிட்டதடி
அது தெரியாமல் தானே
வானவில் வழியில் எனக்கு
மழையாய் அழுது தொலைக்கிரதடி

டாஸ்மாக் கடைக்கு எதிரில்
எனக்கு சாமிக்கு நேர்ந்த வேட்டியெல்லாம்
இப்போ சந்தனம் மண் பூசுதடி
கட்டாந்தரையும் சாக்கடையும் கூட
எனக்கு கடவுள் தெரியுதடி

உன்னை தியானித்த வழியில்
என் இயமம் எல்லாம் நிர்வாணம் ஆனதடி
எங்கள் தெரு நாய் கூட
என் மேல் தீர்த்தம் விட்டதடி

இப்படி எனக்கு ஞானம் பொறந்தால்
நான் இன்னொரு புத்தனடி
அன்பை மட்டும் நான் காசக்கினால்
நீ ஆயுள் கடன்காரி , உன்னை
அடைச்சு வைச்சு இதய சிறையில்
ஆயுள் கைதியாக்கினால்
இந்த காயம் ஆறாதடி

அன்பின் வகைகள் இரண்டுண்டு
உன்னால் அறிந்து கொண்டேனடி
ஆண்கள் அன்பே மேல் என்று
நான் அறிவித்த ஒன்றுடி

பெண்கள் அன்பை பிரித்து வைத்தேன்
அன்னையென்றும், சகோதரியென்றும்
உன்போல் பேய்களுக்கு புரிந்தால் போதுமடி
உன்னால் இன்னொரு ஆணும் பிழைப்பாண்டி

புதன், 24 நவம்பர், 2010

நீயும் நீரும் ஒன்றே

நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !

நீயென் தோழன் முத்து குமார் !


உன் சிலை எழும் நாளில்
ஊரில் உள்ள எல்லா சிலையும்
தானாய் தாள் தொட்டு
தமிழனென்று நிச்சயம் கும்பிடும்

இதய காதலி

நீ தானம் கொடுப்பாய் என்பதனாலேயே
நிதானம் இன்றி துடிக்கிறது என் இதயம்

தானம் என்(ன)புது மொழியோ ?

நீ தானம் கொடுப்பதைவிட
நிதானமாய் இருப்பதை
எடுத்துக்கொள் என்னைப் போல

தோழியா, காதலியா தெரிந்து கொள் கைபேசி

காதலிக்கும் தோழிக்கும் கைபேசியே
 உனக்கு தெரியுமா வித்தியாசம் ?

தவறிய அழைப்பு தருவது காதலி
தவறாமல் அழைப்பு தருவது தோழி

தண்டவாள காதல் கூட தாலி கட்டி கொண்டதடி

இணையா காதலென்று
இரயில் தண்டவாளங்களுக்கு
எழுதிய என் கவிதையை
திருத்தி கொள்கிறேன் பெண்ணே
இரயில் விபத்து தண்டவாளத்தில் அது
இணையும் என் மரணம் போன்று

ஆபாச சுவரொட்டி

ஆபாச முத்தத்தில் கொஞ்சமாய் கலந்து
அரைகுறை ஆடையுடன் கொஞ்சமாய் களைந்து
தினமாக களித்ததால் தினுசாய் வலித்ததாம்
தீராத நோயென்றே எயிட்சும் வந்ததாம்
என் வீட்டு சுவர்கள் என்னை
இடித்துதான் சொல்லியது
எவர்க்கும் அறிவில்லை என்ன நான் செய்வது

தமிழனின் திரை விமர்சனம்

அசினின் அறக்கட்டளையில்
ஆறிபோகிறது திரை க்கண்கள்
இங்கு மட்டுமில்லை இலங்கையில் கூட

கவிஞனின் கேள்விகள்

எங்கள் மரணத்திற்கு பின்னால்
உங்கள் மரண சான்றிதழிலாவது
மாற்றி திருத்தி கொள்ளுங்கள்
மானமுள்ள தமிழனென்று
ஈழத்து கவிஞன் எனக்காக
எழுதிய இறுதி கவிதையிது

மாவீரர் செய்தி

வெட்கம் கெட்ட பூமி கனியில்
விழுந்து தொலைத்து விட்டேன்
துக்கம் கொண்டு என்னுடல்
தூய்மையாக அழுகி போய்விட்டேன்
செரிக்க வந்த புழுக்கள் கூட
சிங்களம் சிரிச்சு நொந்ததடி
சேதி தெரியுமா சின்ன கிளியே
மீண்டும் சீக்கிரம் பிறப்பேன்டி
மீண்டு ஈழ விடுதலை கொடுப்பேன்டி  

செவ்வாய், 23 நவம்பர், 2010

காதலி சொல்லடி

இரண்டு நிலவு வேண்டாமென்றே
தேய்ந்து கொள்கிறதாம் நிலவு இரண்டும்
பௌர்ணமியிலாவது பலிக்கட்டுமென்று
எழுதி வைத்தது நீயா நானா ?

அகம் புறம்

கூசாமல் சொல்கிறாய்
உன் 'மேல்' காதல் இல்லையென்று
உற்று கவனித்து திருத்தி கொள்கிறேன்
உன்'னுள்' காதல் உள்ளது என்று

காதலி காற்றுக்கும் என் மூச்சின் கவிதை தெரியும்

உன் வீட்டில்
கார்த்திகை தீபம்
அணைப்பதெல்லாம்
காற்று அல்ல
என் மூச்சு

என் இதயத்தில்
ஏற்றிவிட்டு
ஏனடி உன் வாசல்
அகல் விளக்கு

பாரதி உன் கவிதை பால்

பாரதி பழகி கொண்டிருக்கிறேன் யுத்தம்
பழக பழக புளிக்காதென்ற
தமிழனின் வெற்றிக்காக அப் 'பால்'  

நல்ல எண்ணம் மறக்கும்

பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே

திங்கள், 22 நவம்பர், 2010

ஏழையின் வரவு செலவில்

உப்பு கூட வாங்குவதில்லை
வியர்வையை காய்ச்சி கொள்கிறோம்
விலைவாசி பிரச்சனையில்

உலக அழகி போட்டியும் நீயும் ?

நீ எந்த அழகி போட்டியிலும்
கலந்து கொள்வதில்லை
ஏனென்றால் நான் அழகாக இல்லை என்பதாலேயே ?

இந்தியாவில்

புலிகள் சரணாயலாம் கூட இங்கு
போர் கோடி தூக்கும்
சிங்கள சிம்மாசனம் என்று
சிறப்பு பெயர் வைக்க சொல்லி
சீனத்து கைதிகளின் கிண்டல்
செந்தமிழன் எனக்கு மட்டும் கேட்கும்

கார்த்திகை தீபமவள்

கார்த்திகை தீபமன்று
கன்னி நீ கட்டி கொண்டாய்
தாவணி பாவடையை
தமிழனின் மரபென்று

அங்கு நான் வந்திருந்தேன்
அரைக்கால் சட்டையுடன்
என்னை நீ பார்த்திருந்தாய்
எண்ணெய் நீ ஊற்றுகின்றாய்

அகல் விளக்கு திரிகளெல்லாம்
அழகாய் தான் எரியவைத்தாய்
இன்னும் ஒரு விளக்கு குறைய
என்னிடம் கேட்கின்றாய்

கண்கள் தான் சத்தமிட
கன்னங்கள் சிவந்து விட
உதடு மட்டும் உயிரெடுத்து
உண்மையாக மௌனிக்க

பின்னிருந்து அழைப்பதெல்லாம்
பெரியண்ணன் எனத்தெரிந்து
அகல் விளக்கு எடுத்துவர
அகலுகின்றாய் அங்கிருந்து

இதய விளக்கு என்னோடு
எரியாத புதிரோடு
புரியாத கோலமென்று
போய்வருவேன் என்று சொன்னேன்

வேட்டி கட்டி சட்டை மாட்டி
வேகமாக உன் வேட்டை காண
நான் வந்த நேரத்தில் அகல் விளக்கு
நன்றாய்த்தான் எரியுது பின்னே

நீ ஏற்றி வைத்த அகல் விளக்கு
நிக்காமல் எரிய கண்டு எனக்கு
புகை போகும் காது வழியில்
புரியாது கனவின் விழியில்

இங்கு நீ எப்போது வருவாய்
என் வீட்டில் காத்து கிடக்க
கனவு வீடு இருண்டு கிடக்கும்
கன்னி கார்த்திகைக்கும் காத்து கிடக்கும் !

அடிடா மச்சான் ?

அலுவலகம் ஒன்று  திறந்து  வைத்தேன்
அடியாள் தேவை விளம்பரத்தில் சொல்லிவைத்தேன்
முன்னதாக காவல்துறைக்கும்
 மூத்த நீதி துறைக்கும்
அழைப்பிதழ் அனுப்பி வைத்து
ஆட்சி அதிகாரத்தில் திறக்க வைத்தேன்

தென் தமிழக திசையிலிருந்து தேடல் கொண்டவனும்
தெரியாமல் சிறையிலிருந்து நேற்று வந்தவனும்
வடபுல கொலைகளில் பல
வழக்கில் சிக்கிகொண்டவனும் வந்தார்கள்

மேலை நாட்டு  துப்பாக்கி மேற்கில் பதுக்கி வைத்தவனும்
கீழை கொள்ளை பலதை செய்து கீர்த்தி பெற்றவனும்
முன் அனுபவன் பெற்றவன் என்று முதலில் வந்தான்

பின் அனுபவம் பெறுவதற்காக பிறகு வந்தவனெல்லாம் இது
பிழைத்து கொள்ளும் வழியென்று தெரிந்து கொண்டானாம்
உற்று நான் கவனித்து உட்காரவைத்தேன்
உரையாடும் சாக்கில் இதை தெரிந்து கொண்டேன்

வழக்கறிஞர் தொழில் படித்த வாலிபன் கண்டேன்
வாழ்க்கை தொழிற்கல்வியின் சில தோளை கண்டேன்
இறுதி காவல் தேர்வில் எழுதிய இளைஞன் என்றோர்
எல்லோரும் முடிவில் தோல்வி கண்டவராம்

கலை கல்லூரி மாணவனும் வந்து கலந்து கொண்டனர்
காசுக்காக பாதி நாளில் வந்து செல்வேன் என்றனர்
பொறியியல் கல்லூரி கட்டமைப்பில் உளுத்துபோன
போய்விட்ட பாக்கி தாளுக்காக பணம் திரட்ட
வந்து நின்ற இளைஞன் கையில் கொரிய கைபேசி
வாலறுந்த நாயை போன்று கத்துகின்றது

என்  நிறுவன வேலையைத்தான் கூறுகின்றேன்
எப்படித்தான் பணி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்
பொறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு
புதிய தொழிலாய் செய்பவர்களை
கண்டு நீங்கள் கழுத்தருத்தால் உம்மை
காவல் துறையின் தலைமை பதவிக்கு உட்காரவைப்பேன்

நடை பாதை வியாபாரியிடம் நாயாய்
நடந்து கொள்ளும் மாமூலுக்கு
தருகின்ற காசை நீங்கள் தட்டி பறித்து எட்டி உதைத்து
தர்மத்தை நிலை நாட்ட அந்த கூட்டத்தை
ஒழித்து விட்டு வந்து விட்டால் உங்களுக்கு
சுங்கதிலே வேலையுண்டு சொல்லிவிட்டேன் செய்வீரோ

அரசியல் தலைவனுக்கு அரிவாள் செய்யும்
அர்ச்சனை செய்யும் பூசாரியையும்
தொண்டர் கூட்டம் தோளைவெட்டி
தொலைத்து விட்டு வந்திடுங்கள்
தண்டனைகள் வராமல் தான்
தலைமை நீதிபதி பணியினை உங்களுக்கு தந்திடுவேன்

மணல் கொள்ளை மந்திரியையும்
மாநகர பேருந்தில் ஏற்றி
விலைவாசி வேகம் போலே
வெடுகென்று கொன்றிடுங்கள்

முதுகில்லா பல முதலமைச்சர்
முற்றுகையிடும் குடும்ப கூட்டம்
சக்கரவழியில் சுற்றி வந்து
சாவினை தான் தேடிக்கொள்ள
தமிழினை கொன்று போடும்
தற் பெருமையையும் அழிதிடுங்கள்

வேலையில்லா இளைஞரெல்லாம்
சேலையில்லா பெண்ணை காணும்
தொலை காட்சி அலைவரிசையையும்
துரத்தி நிற்கும் இணையதளத்தையும்
எரித்து விட்டு வந்திடுங்கள்
என்னருமை அடியாட்களே

எதிர்க்கட்சி ஊழலெல்லாம்
எங்களது ஊழல் போலே
கொஞ்சம் கூட குறைச்சலில்லை
கூட்டணியில் பங்கு போடும்
குழப்பத்தையும் கண்டு நீங்கள்

சாக்கடையில் இட்டு நீங்கள்
சரித்திரத்தில் புதைத்து விட்டு
வந்திடுங்கள் வழக்கில்லை
வாழக்கையுண்டு சிறையிலில்லை

ஒன்றுக்கு வருவதென்று
ஒருவன் சென்று விட்டான்
தண்ணீர் தாகமெடுக்குது இன்னொருவன்
தலை குனிந்து சென்று விட்டான்

வயிற்றை கலக்குதென்று பலர்
வாசல் படிக்கு தாவி சென்றார்
ஒற்றை ரூபாய் தொலை பேசியில்
உத்தரவு கேட்டு விட்டு வந்திடுவேன் என்று
சொன்னோர் இன்னும் பலர்
சொல்லி விட்டு சென்று விட்டார்

எஞ்சியது எழுத்து மட்டும்
எப்படி நான் என் அலுவலகத்திற்கு
மாத வாடகை தந்திடுவேன்
மனதிற்குள் கவலை கொண்டேன்

பள்ளி கூடம் திறந்தொரு
பாடத்தில் மேல் உள்ளவை சொல்லித்தந்தால்
சிறப்பு கட்டணம் சேர்த்தொரு பெரும்
செல்வந்தனாய் மாறி போவேன்
எண்ணம் நான் கொண்டு விட்டேன்
எழுதிவிட்டேன் தமிழக தலைவிதியை

விலைவாசி

தாகம் எடுத்தது
தேநீர் வரவழித்து
குடித்து கொண்டேன்

நவீன குடைகள் நாளைய மழைக்கு தேவையில்லை ?

நவீன குடைகளுக்கு
நாங்கள் எழுதும் கவிதை
கீற்று தான் கிறுக்குகிறது
கீழ்வானத்தில் கிண்டல் அடிக்கிறது

முன்பு நாங்கள் முடைந்து கொள்வோம்
முதுகில் நாங்கள் ஏறிகொள்வோம்
மாசத்தில் மூன்று நாட்கள் மனிதர்கள்
மாட்டிக்கொள்ளும் சட்டையாவோம்

குறைந்து வரும் ஆண்டுகளில்
கூறிகொள்வோம் இரண்டு திங்கள்
அடைமழை ஆடையென
ஆனதெல்லாம் மழைக்காலமென்று

மறந்துதான் போயிருக்கும் எங்கள்
மாற்று குடைகளை கண்டுதான்
வெயிலுக்கு மாட்டிக்கொள்ளும்
விளம்பரத்தில் இருந்தாலும்

காவேரியும் எதிர்த்து வரும்
கடல் நீர் நிரம்பியதால்
எந்த ஏரியும் வறண்டுவிடும்
இப்போது தான் தூர்வார்வதால்

காலம்தான் மாறியது
கடைசியில் தான் தெரியுது
புகை போகும் வானத்திலே
போவதெல்லாம் மேகமென்று

அழுவதுதான் தூரலாகும்
அதற்குகூட மாநகரமெங்கும்
மேம்பாலம் பெயர்ந்து விழும்
சுரங்கபாதை சூழ்ந்து கொள்ளும்

தார்சாலை தவிடாகும் மழை
தண்ணீர்தான் அதை சே (சோ )றாக்கும்
வெள்ள நிவாரணம் வாங்குவதற்கு
விழுந்தான் மூச்சை விடுவர்

இதை கண்டு நான் அழுது
இருந்து விட்டேன் ஒற்றை மரத்தில்
தலை குருத்தை வெட்டி தான் தன்
தாயை அதில் கிடத்தி

பச்சை மட்டை பாடையில்தான்
படுக்க வைத்து தாங்குகின்றேன் நீ
பார்த்திருக்க நான் படித்தேன்
பாவம்தான் நீ கூட

சுடுகாடு செல்லும் வரையில்
சொல்லி வருவேன் என் சோகங்களை
சொர்கத்திற்கு மூச்சு விடும் மக்கள்
சொந்தங்களும் இதை உணருமோ ?

மழை மெல்ல குறைந்து போகும்
மக்கள் உன்னை ஒதுக்கி வைப்பர்
மரங்கள் எந்தாய் குறைவது போலே
மரணங்கள் அடுக்காய் நிகழ்வதாலே

உங்கள் பயனும் மாறிபோகும்
எங்கள் பயணம் போல் கூறிபோகும்
உன் கை ஒடித்து ஒதுக்கி வைப்பர்
உன் துணியெடுத்து கொடி பிடிப்பர்


நவீன குடைகள் நீங்கள் இனிமேல்
நாளைய மழைக்கு தேவையில்லை
வெயிலுக்காவது தேவை என்றால்
வெந்து நீயோ எரிந்து போவாய்

சனி, 20 நவம்பர், 2010

மனிதநேயமும் நானும்

இலங்கை மன்னா (ண்ணா)
என்றாவது ஒரு நாள்
இங்கு வந்துதானே ஆவாய்
அது வரையில் கல்லறையில் காத்திருக்கிறேன்

வெள்ளி, 19 நவம்பர், 2010

என் மரணத்தின் தத்துவம்

நம்மை போல்தான் சூரியனும்
நாள்தோறும்   இறந்து கொண்டிருக்கிறதாம்

இன்று பிறந்த இன்னொரு சூரியன் என்னிடம் சொன்னது

அது மாலையில் மரணத்தை மகிழ்ச்சியாக
ஏற்று கொள்ளுமாம்

உனக்கும் எனக்கும் நண்பா

நான் உன்னை காதலிகின்றேன் என்று
கடுமையாக கவிதை எழுதுமுன்னே
கைபேசியில் வாழ்த்து சொல்கின்றாய்

ஆண்மை நண்பனே !

குறுஞ்செய்தி கொடிகளில் பறக்கும்
வரிகளை படிக்கும் போதுதான்
வாழ்த்தின் அர்த்தம் புரிகிறது

சர்வதேச ஆண்கள் தினத்தில்

என் வீட்டுக்காரி சிரிக்கின்றாள்

முட்டாள் வெள்ளி
 முன்பிணை வாங்கி வந்ததாம்
ஆண்கள் தினமென்று

இப்படிக்கு சர்வதேச ஆண்கள் தினம்

இன்று வாழ்த்தாத
உன் ஆண் நண்பர்கள் எல்லோரும்
மகளிர் தினம் மன்று மறக்காமல் வாழ்த்தட்டும்

விளக்குமாறு ஆண்கள் தினம்

விளக்குமாறு அவள் விரலை பிடித்து
வினவும் கேள்வியில் தெரிந்து கொண்டேன்

அகில உலக ஆண்கள் தினத்தில்
அன்பாய் மாறும் அவள் முறையில்

பழைய கையை பார்பதற்கு
பாசம் கொண்ட துடைப்பம் நான்தான்

இன்று மட்டும் உன் கையில்
இருக்கும் சுகம்போல் வேறுண்டோ

நாளை  சனியில் பெண்ணே நீ
நடக்கும் வழக்கம் தெரிந்துதான் -இன்று

தூசியெல்லாம் நன்றாய் விரட்டி
துடைத்து விடு உன் கணவனுக்கு

இன்று மட்டும் திட்டாதே

வெள்ளி என்று வேட்டி கட்டி
வெயிலின் நிழலில் மீசை முறுக்கி
துள்ளி விழும் அலையில் எழுந்து
தூரல் போடும் மழையில் வியர்த்து
பெண்ணின் மடியில் ஓய்வாய் கிடக்க
பெயராய் வரும் ஆண்கள் தினம்

தினமும் களைத்து தேடல் கொண்டேன்
திரும்பும் முடிவில் கண்டு கொண்டேன்
ஆண்கள் வெற்றியில் பெண்கள் எல்லாம்
அள்ளும் பரிசாய் குடும்பம் என்றால்
விரும்பும் வரையில் வாழ்வதற்காக
வெள்ளி என்னை வாழ்த்துகின்றாயே

சர்வதேச ஆண்கள் தினம்

முன்னூற்றி அறுபத்தி நான்கு நாளும்
முழுசாய் உனக்காக வாழ்ந்து விட்டேன் பெண்ணே
இன்றொரு நாள் மட்டும் எனக்காக வாழ்ந்திடடி செல்லமே !

வியாழன், 18 நவம்பர், 2010

எல்லோருக்காகவும் நிகழ்காலத்தில்

இறந்த காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன் நிகழ்காலத்தில்
எதிர்காலமும் இறந்து விடுகிறது

எதிர்காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன் இப்போது
நிகழ்காலமும் மரித்து விடுகிறது

நிகழ்காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன்
இறந்தகாலம் பிறந்து விடுகிறது எதிர்காலமாய் எல்லோருக்குமாய்

ஞானத்தின் நண்பன்

நான் காதலிக்கும் போது
நீ காசு சேர்த்து வைத்தாய் நண்பா

நான் கல்லறையில் இருக்கும்போது - அதில்
நீ செலவழித்து எழுதி வைத்தாய்

காசும் காதலும் கூடாது ?

புதன், 17 நவம்பர், 2010

உன்னை சுமந்து நிச்சயம் தோழி !

கண்ணில்லை எனக்கு
காலில்லை உனக்கு
கால் கொடுத்தேன் உனக்கு
கண் கொடுத்தாய் எனக்கு

நடந்து செல்வோம் நண்பர்களாய்
கடந்து வரும் சிங்க கூட்டம் எதிரி(ல்)
கண்டால் நீயோ என்னை கண்டு
வில்லால் ஒழித்து முடிப்பாய்யென,

விழிப்பேன் உனக்கு வெல்வோம் தோழி
பழித்தால் நட்பை காதலென்று பெண்ணே
விழிக்காதிருந்து நான்  வேதனை கொண்டால்
ஒழிப்பாள் ஓடி என்னருமை தோழி

நலம் பெற என் கவிதை

அரிசி சோறு முதல்வேளை
அரைத்த கேழ்வரகு மறுவேளை
இரவு மட்டும் சில பழங்கள்
இனிப்பாக சேர்த்துகொள்

முதல் நாள் கடலை எண்ணெய்
மூன்றாம் நாள் நல்லெண்ணெய்
இரண்டாம் நாள் சூரியகாந்தி எண்ணெய்
இப்படி மாற்றி நீ சமையலுக்கு பயன்படுத்து

முளை கட்டிய பயறு வகை
முற்றாத தேங்காயுடன்
அரை வேக்காட்டில் வேகவைத்து
அளவோடு சாப்பிட்டுகொல்

தேன்துளிகள் சில சொட்டு
ஊணுக்குள் நீ விட்டு
காலை மட்டும் சீக்கிரமாய்
கடமையென எழுந்துகொள்

பொரித்த உணவு கொரிக்கயிலே
எரித்த கொழுப்பு மிஞ்சுமென்று
வயறு உன்னை கெஞ்சயிலே
வாயை மட்டும் மூடிகொள்

பூச்சி மருந்து காய்கறிகள்
பொடிசாக அரிந்து நீ
நெடும் நேரம் கொதிக்க வைத்தால்
நீடூழியா வாழ முடியும்

உமிழ் நீரில் ஊறவைத்து
உன் உணவை அரைத்து நீ
சிறுக சிறுக விழுங்கிவிடு அந்நேரம்
சிந்தனையில் தூயதையும் சேர்த்துவிடு

காக்கவிற்கு சிறு உணவை
மேம்போக்காக வைப்பதெல்லாம்
சாத்திரமென்று நினைக்காதே - தன்
சாவுகஞ்சிய சிறு செயல்தான் நீ யோசி


துரித உணவுகளை நீ துரத்த
எளிய வழிகள் இன்னொன்று
பச்சை உணவுகள் சிலவற்றை நீ
பறக்கும் போதும் உண்டிடலாம்



தேநீரை இடைவெளியில்
தேக்கித்தான் வைத்தால்தான்
சுறுசுறுப்பு கூடுமென்றால்
சொன்ன வார்த்தை பலிக்குமென்றால்

மலையெல்லாம் சோம்பேறியாக
மழையில் ஏன் குளிர்வதென்ன- நீ
மட்டும் இதை புரிந்து நிம்மதியாக காபி
போட்டு  குடிப்பதையும் நிறுத்திகொள்

என் கைகள் அடித்ததெல்லாம்
எந்திர விசைபலகை கேட்கும்போது
எழுத்தில் எப்படி பிழை வரும்
என்னருமை நண்பா நீ யோசி ?

என் கவிதை இது இல்லை
உங்கள் வாழ்க்கை திருடியதால்
உருவான எண்ணம் இது
உணர்வாயா உற்ற தோழனே !

சாதி

அடடே
அரசியல் சாதியில்
அடிதடி
ஊழல் எந்த சாதி ?

மாமியார் மருமகள் சண்டை

அம்மா உன்னோடு என்  உயிர் பிறந்தது
அவளோடு என்னுயிர்  வாழ்கிறது
என்னோடு இருஉயிரும்  இருந்திடுங்கள்
உங்கள் ஒருவருக்கு மட்டுமல்ல என் ஒரு  உயிர்

எதிலின் தீபாவளி எண்ணெய் குளியல்

ஈழத்தில் இருக்கும் விதை எள்
எண்ணெய்க்காக முளைக்கும் பொறுத்துகொள்
சிங்களத்தை தொலைத்து தலைமுழுக
சீக்கிரமாய் குளிக்கலாம் புரிந்து கொள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சிவகாசி சிறார்

உங்களின் பற்றாத தீக்குச்சிக்கு மட்டுமே
என் படிப்பறிவின் வேதனை தெரிந்திருக்கும்
எரியாத எங்கள் வாழ்க்கைக்காக இறந்துபோனதால்

அடைமழை நேரத்தில் அணைக்க

வறண்டு போன உங்கள் அணைகளுக்கெல்லாம்
வாய்கால் வைத்து நிரப்பிகொள்ளுங்கள்

நினைக்க மறந்த கேரளமே
மறக்க நினைக்கும் கன்னடமே
மறந்த நினைக்க ஆந்திரமே
                                                      (வறண்டு )


ஏராளமாய் இங்கு மழைகளுண்டு
இப்போது எங்கள் தமிழகத்தில் பெய்வதுண்டு
மழை நீரை நாங்கள் சேமிப்பதுண்டு
மறந்து போன உங்களுக்கும் சொல்வதுண்டு
                                                         (வறண்டு )

தவிச்ச வாய்க்கு தண்ணீரும்
பசிச்ச வயத்துக்கு கொஞ்ச சோறும்
கொடுக்கும் கொடைதான் தமிழ் மண்ணு
குழையும் சேறில்தான் நிமிர்ந்து நின்னு
                                                          (வறண்டு )
மழையும் எம் மனமும் ஒன்றென்றால்
பிழையும் அணைகளும் நீயென்றால்
உழைக்கும் வர்க்கம்தான் உயரணுமென்றால்
பிழையை உணர்வாய் பிற மாநிலமே

                                                               (வறண்டு )

சீக்கிரம் வந்து நில்லு

சளி பிடித்து கொள்ள போகிறது
சட்டென்று வந்து நில் என் மறைவிடத்தில்
சற்றும் குறையா காதலுடன்தான் சொல்லுகின்றேன்

மழையில் நீ நனைந்து
மறந்தாலும் உன் நினைவில்
கல்லறை அடியில் நான்
காத்திடுவேன் காதலியே

முட்டை

முள்வேலியில் முட்டையிட
முட்டாள் குருவி நினைத்தாம்
சந்ததி பெருகுமென்று தன்
சம்சாரத்திடம் சொன்னதாம்
பறவை அதற்கு தெரிவதில்லை
பாய்ந்து செல்வது உயர்மின்சாரமென்று

சிக்குண்டு, சிறகிழந்து செத்துதான் போனதாம்
கடவுள் கண்டு கண்திறந்து
கண்டுக்காமல் இருப்பதை தெரிந்து
ஆண்குருவி மனம் நொந்து
அடைகாக்க வேண்டுமென்று
ஆவேசமாய் முட்டையிடும்
அந்த முட்டை பெயர்தானே
கூழை முட்டை இல்லை இல்லை
ஈழ முட்டை எனபெயர்தான்

முகம் தெரியா காதலியே

கப்பல் உனக்கு கவிதை எழுதும் ஒரு
கைபேசி வழி செய்தி சொல்லும் -என்
கண்ணீரில் தத்தளிக்குமது
கடல் தாண்டி செல்லும் பொது - நம்
காத்திருக்கும் பயணத்திற்காக !

குளிர்காலம்

குளிர்கால கூட்டத்தொடராய் கூடி
கொஞ்சுகின்றேன் கனவில் நான்  காதலியே
அவை கலைந்து எழும்போதுதான்
அடிதடியாய் கவிதை வந்து
அழைக்கிறதே உனைகண்டு

மழைக்கால பாராளுமன்றம்

குளிர்கால கூட்ட தொடரில் மட்டுமே
கோவணம்  கட்டிக்கொள்ளும், நிர்வாண அரசியல்
அது கூட அவை கூடியவுடன்,
அவிழ்த்து போட்டு விட்டு வெளியேறும் .

இன்றைய பாராளுமன்றத்தில்

எல்லா துறையிலும் ஊழல் இருக்க
இந்திய நீதிபதியின் கருத்தை போன்று
இன்னொரு துறையாய் ஊழல் துறையை
இப்போதைய பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால்
மற்ற துறையெல்லாம் மானமாய் இருக்கும் - நம்
மக்கள் அதற்கு மரியாதை தந்திடுவர்

தொலைதொடர்பு ஊழல்

மேற்கே செல்லும் மேகம் மறைந்து
மின்ன துடிக்கும் நட்சத்திரம் தெரிந்து
ஞாயிறு மறையும் நேரம்
நான் தொலைந்தால்தான்
நம் தொடர்பு அம்பலமாகும்

செவ்வாய்

நாட்கள் கூட உன் செவ்விதழ்  காண,
ஞாயிறும் திங்களும் காத்திருக்கிறதே !
நான் மட்டுமா காத்திருக்கிறேன் காதலி !

நாட்களும், நானும்

செவ்வாய் கூட உன்
சிற்றிதழ் கடந்து
'போ'  வாய்  என்று
பொடி வைத்து பேசும்
காதலி

திங்கள், 15 நவம்பர், 2010

பயணச்சீட்டு கொள்ளை

நடத்துனரின் இருக்கைமேல்
நல்ல வாசகம்
 திருடர்கள் எச்சரிக்கை

சனி, 13 நவம்பர், 2010

சுடுகாட்டில்

காலத்தை காசாய் மாற்றி
காதலிக்கு செலவு செய்தேன்
நெற்றி ரூபாய்
நினைத்து கொள்ளும்

கடற்கரை காதல்

உப்பில்லா கடல் உன்னுடைய உடல்
முத்துமுத்தாய் முத்தமெல்லாம்
மொட்டுகளாய் இதழ்விரித்தால்
அலையாகும் உன் கன்னம்
அதைபார்க்கும் மண்ணுலகம்
ஏழையான என் காதலிக்கு
இப்படிதான் காட்டிடுவேன்

காதலி நீ கொடுத்த மலர்ச் செடி

ஊரெல்லாம் பூக்களுக்கு பஞ்சம்
இது மழைக்காலம்
உனக்குத்தான் திருமணமாம்
அது விழாக்கோலம்
உன் கழுத்தங்கே காத்திருக்கும்
என் கையெடுத்து
ஒரு மாலை கொடுத்திடுவேன்
நீ மணமுடிக்க!

என் குடும்பம் வந்து கோபிக்கறது
என்ன சொல்வேன்
நீ வைத்த மலரில்தானே
நம் தோட்டமெல்லாம்
வாழுகின்ற போது நீயோ
போய் சேர்ந்த மர்மம் என்ன
சொல்லு சொல்லு
என் கல்லறைதான் நனைகிறதே
உண்மை சொன்னால் ?

வயதுடன்

ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால்
கழிந்து போகிறது
இளமை

பெயர் வைத்து யோசி

கணேசனுக்கு கல்யாணம்
வள்ளியுடன் வாழ்வதற்கு
அப்பன் செய்த தப்பென்று
அறிவில்லா செய்கையால்
இப்படியா பெயர் வைப்பார் - என்
இளைய தலைமுறையே நீ யோசி

மனித நீதி

நீதியை தூக்கு மாட்டி
நிறையை அதன் தட்டில் வைத்தால்
குறையா குற்றமெல்லாம்
கூடுது அதன் தொண்டை வரை
தலைதான் எழுத்தாய் மாறி
தண்ணீரில் போட்ட கோலமென
விதிதான் வேடிக்கை பார்க்கும்
வேதனையை என்னில் தேக்கும்
தராசில் தொங்கும் நீதி
தமிழென்று உயிரை விட
எந்திர இதயம் இன்று
எப்படித்தான் ஈழ எடையை போடும்

வெள்ளி, 12 நவம்பர், 2010

தோழிக்கு திருமண வாழ்த்து

சந்திரனை சூரியன் மணக்கட்டும் அந்த
சரித்திரமாய் இந்நாள் இருக்கட்டும் !

பாப்பா உனக்கு

அழகான ஆரமுதே
இனிப்புகளை ஈயெடுத்தால்
உனக்குள்ளே ஊறுவரும்
என்னைத்தான் ஏசாதே
ஐம்புல வெற்றிக்காக
ஒரு ஓசையாய்
ஒளவ்வையென நோய்நீங்க
. ' . கவியின் இனிப்பாக
பாப்பா உனக்கு படிக்கின்றேன்

புதிய உயிரெழுத்து

அ தெரியாதவன் அரசியல்வாதி
ஆட்சி செய்ய தலைவனாய்
இளிச்சவாயன் அனைவருக்கும்
ஈன பிறவி உழைப்பாளிக்கும்
ஊதுகின்றான் ஒரு சங்கை
எழுதாத இவன் கையில்
ஏமாற்றிதான் மையை வைத்து
ஐந்து விரலில் ஒற்றுமையாய் அதிக
ஓட்டை கள்ள தனமாய்
ஒளவ்வை சொன்னை ஆத்தி சூடியை
அ. ' . றினமாய் மெய்ப்பித்தான்

உடன் கட்டை(சதி ) மீண்டும் வேண்டும்

சாதி சதியாக  வேண்டும்

காலம்

என் கருவில் ஈழம் இருக்கும்
இனிய குழந்தையாய் சீக்கிரம் பிறக்கும்

நண்பா நீ அழுதால்

உன் கண்ணீர் வழி
என் கன்னத்தில் வழியும்

ஊழல் அரசியல்வாதி

நீ கருத்தரிக்கும் போதே
அவள் இறந்திருக்க வேண்டும்
தாயா ?
நோயா ?
அவளென யோசி ...............?

நீ என் பக்கத்தில் இருந்தால்

கருவாட்டை மாலையாக்கி
கழுத்தில் நான் மாட்டி கொண்டேன்
மல்லிகையாய் மணக்கிறதே காதலி ?

வியாழன், 11 நவம்பர், 2010

இராணுவ வீரனுக்கு மரியாதை ?

வீட்டை மறந்துதான் காத்திருந்தோம் கார்கில்
வெற்றிக்காகத்தான் உயிர் பிரிந்தோம் - எம்
குடும்பம் கும்பிட கடவுள் ஆனோம்
இறந்தும்  கல்லறை கல்லெடுத்து படியாவோம்
இனிய உம்   குடும்பம் குடியேற கோயில் ஆவோம்

அங்கபிரதட்சணமாய்  ஆதர்ஷில்தான்
அவிழும் கோவணமாய் அரசியல்வாதி
உருளும் ஊழலில் பிரளுகின்றான் - எம்
உயிரை கொடுத்தது இதற்க்காகதானா ?
எங்கள்  குடும்பத்திற்க்காகவாவது உயிரோடு
எதிரியிடம் சரணடைந்து, இற(ர)ந்தில்லாமல்  இருந்திருக்கலாம்

இந்தியா முன்னேற ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை
மாற்றிகொள்ளுங்கள் மடையர்களே
எலிகளும் , புழுக்களும், பூச்சிகளும்
இந்நாட்டின்   குடிமக்கள் என்று ஆக்கிக்கொள்ளுங்கள்
இந்தியா ஏழை நாடாய் இருக்காது
எங்கள் உணவு கிடங்கு எழுதிய கவிதை இது

புதன், 10 நவம்பர், 2010

கொஞ்ச தூரத்தில் கொடுத்திடு முத்தம்

கை பேசியே நீங்கள்
முத்த சொர்க்கத்தில் இருக்கும் போது
நான் பித்த கலக்கத்தில் இருக்கிறேன்
நானும் திறக் கற்றையாகவது தீண்டனும்
என் காதலின் கன்னத்தை
இதோ உன் முத்தத்தோடு என் முத்தமும்

ப்ளூ டூத் - திறக் கற்றை

திறக் கற்றை உன்னை கொன்று விட வேண்டுமடி !

என்  கைபேசியே நீ திறக் கற்றையாக *
கன்னத்தில் முத்தமிடுகிறாய்
என் காதலியின் கைபேசியோடு


என்னை கைகாட்டியும் பேசுகிறாய்
மனித காதலுக்கு மனம் நோக நாம்
மணி கணக்காய்  முத்தமிட்டு கொள்வோமென்று


bluetooth(ப்ளூ டூத்) -திறக் கற்றை

அடி பாவி கைபேசியே ?

நானும் அவளும் காதலித்தோம்
என்னுடையதும் அவளுடையதும் காதலிக்கிறது
கைபேசியே போட்டியா ?

காத்திருக்கிறாயே இருபத்தி நாலு மணிநேரமும் - உன்
காதலி மணி அடிப்பால் என்று

நல்ல வேளை என் காதலியும் அச்சமயத்தில்
நமக்காக கவிதை எழுதுகிறாள்
நாம் காதலித்தால் நம் கைபேசியும் காதலிக்கிறது
நம் கனவுகளில் பேசும் போதுதான் அது  செத்துவிடுகிறதாம்
அழைப்பு மணி அடிக்கிறாள் காதலா என்ன செய்ய ?

செவ்வாய், 9 நவம்பர், 2010

கைபேசி நீ குற்றவாளி

தபால் பெட்டியெல்லாம் தற்கொலையில் தொங்குகிறது
காதல் கடிதமெல்லாம் கைபேசியில் செல்வதனால்

காதலுக்கு பொருந்துமா ?

உதடுகளும் பாதங்களும் ஒன்றுதான்
மனித மனம் போன்று நடப்பதில்லை - என்
காதலியும் கல்லறையும் ஒன்றுதான்
காதலினை என்றும் வாழ வைப்பதில்லை

எனக்கு காதல் தோல்வியில்லை வெற்றிதான்

தோல்வி காதலுக்கு
வெற்றி கல்லறைக்கு
ஒற்றை கையால் தட்டி
ஓசை எழுப்பும் மௌனத்தால்
இந்த வெற்றியையும் ஏற்றுகொள்வேன்
இன்னொரு கையில் மது கோப்பையின் பரிசுடன்

படியென்று சொல்லாதே



பேருந்து படிக்கும் பெயர் மாற்றம் வேண்டும்
படியென்று பள்ளியில் சொல்லுவதெல்லாம்
பயணத்தில் என்று பழகிக்கொள்வதால் எங்கள்
பிஞ்சின் பழமெல்லாம் பெயர்ந்து விழாமல் இருக்க

என் வயிற்றில் வளருது தாஜ்மகால்!


கர்ப்பத்தை முறுக்கி காட்டுகிறேன்
காதல் தோல்விஆணுக்கு மட்டுமல்ல தாடியுடன்
கண்ணீராக வாழும் எங்களுக்கும்தான்

காதலுக்கு தாஜ் மகால் மட்டுமல்ல
காதல் தோல்விக்கு கர்ப்பத்தையும் கட்டுகின்ற
கணக்கற்றவர்களுடன் நானும் ஒருத்தி

திங்கள், 8 நவம்பர், 2010

படலும், விதையும்

ஆடு மாடு மேயுமேன்று
அறிவுகெட்ட பச்சை ராசு
முள் வேலி படலிட்டு
முழு மூச்சாய் காவலிருந்து
தானியங்கள் காத்து வந்தான்
தக்க சமயம் பாத்து வந்தான்

குயிலொன்று தனியாயிருந்து
கூவுகின்ற இசையில் நொந்து
சுதந்திரம் கெட்டதென
சோகமாய் கவி படிக்க
தானியத்தை தின்பதற்கு
தவிட்டுக்குருவி  கூட்டத்தோடு
குயிலும் தான் கூடுதான்
கொடுமை கொடுமை கொன்றுவிட்டான்
குருவிகளை கொலை செய்தான்

காக்கை இதை கானதிருக்க
கருப்பு துணியால் அதன் தோலை செய்து
குறுக்கு புத்தியால்
கொடியாய் கட்டினான்
இயற்கையை செயற்கையாக
இறைவனுக்கே செய்து காட்டினான்


முற்றிய கதிர்கள் முழுசாய் தலைசாய்ந்து
முள்வேலின் எல்லைக்குள்ளே
தமிழ் மகள் நாணம் போலே
தற்பெருமை காய்ந்த சருகாய்
அறுவடை காலமென்று
ஆசையாக காத்திருந்ததாம்

பச்சை ராசு பருவம் உணர்ந்து
பழைய அரிவாள் கொண்டு வந்து
சனி மூளை சில தானியகதிரை
சரித்திரமாய் அறுத்து வைத்தான்
கீழ் மெனைகள் சில பிடித்து
கிடத்தினான் கதிர் அறுத்து

செத்து விழுந்த செங்கதிர்கள்
சிவந்திருந்த மண்ணில் வீழ்ந்து
கட்டுகட்டாய் சவமென்றாலும்
களத்துமேட்டுக்கு கொண்டு சென்றான்
காற்று உள்ளபோதே தூற்றனும் என்று
கற்றறிந்த  பழமொழி உணர்ந்து
பதர்களை தூற்றினான்
பார்த்திடுங்கள் என் தமிழ் மக்களே

விதையும் வைக்கோலும்
வேறாய் ஆக்கி மூட்டையாய் கட்டி
முள் வேலி விட்டு முதுகில் சுமந்து
முந்தி வந்தான் பச்சை ராசு
இத்துணை நாளும் முள்வேலி நினைத்தது
எங்கள் தமிழினம் நசுங்கட்டுமென்று
விதைகள் தான் வெளியில் செல்லும்
விதிதான் வேறொரு மண்ணில் முளைத்து
மனிதநேய பஞ்சம் போக்க
மண்ணெங்கும் வளருது பாரு

தமிழகம் கூட முள்வேலிதான்
தமிழன் நானும் உணர்ந்தால் கூட
காலம் எனக்கு கதிராய் மாறும்
காத்திருப்பேன் விதையாக மாற
சிறுகள்ளிகள் என் பாதையோரம்
செந்தமிழும் சிறையின் தூரம்
வாகை பூதான் என் வருகைக்காக
வளைத்து போட்ட வேலியில் உயர்ந்து
முள் வேலியை வேடிக்கை பார்க்குது
முளைக்கும் ஈழத்தை தன்னில் தெளியுது

பேசாதே ?

மாற்று திறனாளிகள் என்னை மன்னியுங்கள் - உம்
மனம் நோக எழுததான் நான் மனிதனில்லை
மற்ற மொழி மெச்சுகின்ற தமிழன்தான்
மன்னிக்க முடியாதென்ற பிறப்பை நொந்து
இன்மொழியை பழித்திட்ட இவரெல்லாம்
இன்னொரு பிறவியில் ஊமையராய் பிறக்க வேண்டும்

உமை கண்டு நான் எழுதிய கவிதை கண்டு
உண்மையுணர்ந்தால் நன்றியுரைப்பேன் மாற்று என் தோழனே
வரம் ஒன்று கிடைத்துவிட்டால் என் வாழும் தமிழுக்கு
வழக்கமாக இதை நான் செய்திடுவேன்

ஊனமென்றும்  ஊமையென்றும்   உற்ற தோழனே
உன்னை நான் பழிக்கவில்லை என்னை மன்னியுங்கள்
தமிழ் மொழியினை நேசிக்கின்ற தலைமகனாய்
தவறாமல் உனக்காக நான் பேசிடுவேன்
நம் மொழியை உணர்ந்துதான் நண்பர்களாய்
நன்றியோடு தோள் சேர்வோம் வாருங்களேன்

நெரிசல் கோ ய ம் பே டு

விரைவு பேருந்தில் நான் ஏறி, தீபாவளிக்கு
விடியுமுன்னே ஊருக்கு  செல்ல
பயணசீட்டை நான் கேட்டால்
பதறி நான் போனேன்                  


போன முறை வந்ததற்கும்
போக்குவரத்து வீழ்ச்சிக்கும்
என்னுடைய காசில்தான்
இறுதி யாத்திரை தொடங்கனுமாம்

இருபது ரூபாய் அதிகமாய்
இருட்டான என் பையில்
கொடுத்து நான் வாங்கியமர்ந்தேன்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில்

கொசுகடியின் போராட்டத்தில்
கொடுமைகளை அனுபவித்தால்
தேக்கமான பேருந்துகள்
திசைக்கொன்றாய் மாறி நின்று

போக்குவரத்து விதிகள்தான்
புரியாமல் குழம்பி நிற்க
சாலையினை கண்காணிக்கும்
சாப்பாட்டுக்கு எங்கோ சென்று

தூங்கிபோகும்  காவலர்கள்
துணியை மறக்கும் அவர் கனவுகள்
என்னை வந்து எட்டி பார்க்கும்
இன்னொரு நினைவும் நெட்டி முறிக்கும்

இரவில் நடக்கும் போக்குவரத்தை
இயந்திரத்திடமாவது கொடுத்து வைத்தால்
பச்சை விளக்கு பக்குவமாய்
பயணத்திற்காக எரிய வைக்கும்

சிவப்பு விளக்கு சிக்கலினை
சீரழிந்து கிடக்கும் போக்குவரத்தை
மஞ்சள் நிறத்தை மங்கலமாய் என்
மனம் போல கொடுத்து வைக்கும்

பலமணி நேரம் காத்திருந்து
பரிதவிக்கும் சக்கரங்கள்
என் மூச்சுபோல் இறங்கியிருந்து
இன்னொரு பேருந்தில் ஏறிக்கொள்ளும்

படியில் நான் தொங்கி
பாவமாக தூங்கி
வழியில் நான் வீழ்வதில்லை
வாழ்கையிலும் தோற்பதில்லை

போக்குவரத்து தடங்கல்களை
போக்குகின்ற வழி செய்தால்
நின்று கொண்டிருக்கும் வியாபாரம்
நிமிர்த்தி வைக்கும் போக்குவரத்து துறையை

தூங்குகின்ற துறைதான்
தூண்டுகின்ற இச்செய்தியால்
பல முறைதான் சென்று வரும்
பாதையாக மாறிபோகும்

நடத்துனரும் ஓட்டுனரும்
நம்மை போன்ற மனிதர்களே
அவரை கேட்டை திட்டம் சொல்வார்
அதற்காகவாவது  தலையசைக்குமா

கையேந்தி பவன்


அழுகி போன தக்காளி
அலசாத வெங்காயம்
சொத்தையான காய்கறி
சோற்றுக்கு மலிவான அரிசி
வடிகட்டாத உப்பு நீர்
வறுவலுக்கு பனங் கொட்டை  எண்ணெய்
கள்ளச்சந்தை எரிவாயு
கழுவாத எச்சில் பாத்திரம்
ஈக்களுக்கு இன்பபுரி
இருட்டுக்கு இன்னொரு பூரி

பூச்சி மைதா ரொட்டிக்கு
புகை படிந்த தோசை கல்லில்
பருப்பில்லா சாம்பார்
பலவகையாய் கூட்டியே
புளித்துப்போன தயிரோடு
புளிக்காத ஊறுகாய்
வியர்வை சொட்டும் உழைப்பாளிக்கு
விளங்காத சுகாதாரம்
எட்டு ரூபாய் சாப்பாட்டில்
இதை விட வேறில்லை
மூட்டை தொக்கும் கணேசன்
மூன்று ரூபாய் பாக்கிக்கு
மதிய சாப்பாட்டை மறந்துதான்
மாடாய் உழைக்கிறான் நொந்துதான்

உயர்தர சைவ உணவில்
உழைக்கும் வர்க்கம் மலிவு விலையில்
கனவைத்தான் கண்டுவைக்க
காசில்லாமல் உண்டு வைக்க
ஒரு ஈ குளிரூட்டிய அறையில்
உட்கார்ந்து தின்கிறதாம்
ஏழைகளை பார்த்துதான்
இந்த கவிதையை படிக்கிறதாம்
எங்களைவிட மனிதனெல்லாம்
இலவசமாய் உண்பதில்லை
தப்பித்தவறி அடித்தால் கூட
தடுமாறும் மரணம் கூட
ஊழல் போன உளுத்தர்களின்
உயரும் கையை கண்டுதான்
பறந்து நான் செல்கின்றேன் - அவர்
பார்க்கும்போது வாயில் நுழைந்து
இன்னொரு ஏப்பம் விடுகின்றேன்
எமன் வந்தால் மட்டும் இறக்கின்றேன்

மோட்சத்தின் என் சாவை
முழித்திருந்து கண்டிடுங்கள்
கையேந்தி பவன் அருகில் எனக்கு
கல்லறையை கட்டிடுங்கள்