பக்கங்கள்

வியாழன், 6 ஜனவரி, 2011

எறும்பும் யானையும் கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ?

உன்னை நான் கடிக்க முடியும் 
உன்னால் என்னை அடிக்க முடியுமா ? 
என்னால் எத்துனை கரும்பையும் கடிக்க முடியும் 
ஒரு கரும்பாலாவது என்னை 
உன்னால் தூக்கி அடிக்க முடியுமா ? 

மனிதனை போல கற்பனை வேண்டாம் 
மன்னித்து கொள்ளுவோம் 
மறந்தும் கவிதையெல்லாம் கிறுக்க வேண்டாம் 
மண்ணில் புதைத்து கொள்ளுவோம் 
கால் தடத்தை கண்டு திருந்தட்டும் 

இரண்டும் எழுதிய 
இறுதி சுவட்டின் கவிதையிது

கருத்துகள் இல்லை: