பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சரஸ்வதி தேவி

கல்விதேவி கொஞ்சமாய் கருணை காட்டு - என்
கண்கள் ஒளிபெறட்டும் தன்மை காட்டு
சட்டம் விளக்கம் பெற சாதனை செய்ய - இந்த
சமுதாயம் விழித்தெழதான் போதனை செய்ய
வாழ்க்கைகல்வி மறைஞ்சுதான் வன்மைகாட்டும் - அந்த
வழக்கம் தொடரமால்தான் திண்மை கேட்டு
"அ" முதல் " . '."   வரை அறிவை மீட்டு
ஆருயிர் உண்மை பெற படிப்பை ஊட்டு
தொன்மை புகழ் இலக்கணமாய் தமிழ் இனிமேல்
தொடுவானம் தாண்டிதான் அழகை கூட்டும்
கன்றை போல் கவிதை பால் கேட்டு  வந்தால் - அந்த
காயும் நிலவை கறந்து வந்து இனிமை செய்வேன்
வந்தனமாய் யாசிக்கின்றேன் வருத்தம் போக்கு
வாடி அடி விழுந்துவிட்டேன் என்னை திருத்தமாக்கு .


கருத்துகள் இல்லை: