பக்கங்கள்

திங்கள், 20 செப்டம்பர், 2010

என் பாட்டி

தகப்பன் கொடுத்த தர்ம அடி
தாய் கொடுத்த கருணை அடியில் - நான்
தாழ்ந்து கிடப்பதெல்லாம் உன் மடியில் உன் வீட்டில்


காலன் கொடுத்த செருப்படியில் இன்று நான்
கலங்கி கதறுகின்றேன் உன் காலடியில் - ஆனாலும்
உன் வீட்டில் உன் மடியில் உறவு எனக்கில்லை

இறப்பு காட்டில் இடம் மாறிவிட்ட - என்
இதய  வீட்டில் நெகிழ்ந்து குடி ஏறிவிட்டாய்
நினைவு ஏட்டில் நிறைந்த கறியாய்
நிகழ்த்திய சுடு சா(வு ) பாட்டில்
என்னை  இருக்க வைத்துவிட்டாய்

கருத்துகள் இல்லை: