பக்கங்கள்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

என் தந்தையே!

கடவுள் உனக்கு மட்டுமே
கருவறையை நெஞ்சில் படைத்துவிட்டான் காலம் முழுக்க
உன் கற்பத்தில் வளர்வதனாலேயே எனக்கு
ஒரு வயதுகூட பூர்த்தியாகவில்லை

கற்பத்தை கலைக்கும் உரிமையாய் கூட நீ  எனக்கு
கல்யாணத்தில் கொடுத்துவிட்டதனாலேயே நான்
கல்லாய் இல்லாமல் கரைந்து போகிறேன்  குறை மாதத்தில்

நீ முதியோர் இல்லத்திலும்
நான் தனி குடித்தனதிலுமாக

கருத்துகள் இல்லை: