பக்கங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காதல் மாத்திரை

காதல் நோய் வந்தது

கவிஞன் மருத்துவனும் வந்தான்

கைபிடித்து நாடி பார்த்தான்

கன்னம் தொட்டு யோசித்தான்

நெற்றியிலே நீவிவிட்டு பின்

நினைவுகளை ஓட விட்டான்

இதயத்தின் மேல் மிருதுவாக

இன்பத்தை கொடுபதுபோலே

கூடிய குடும்ப கூட்டத்தை பார்த்து

கொஞ்சம் பக்கத்தில் வரச்சொன்னான்

கொடும் நோயின் தரம் சொன்னான்

தனிமை தேவை என்றான் கூட்டத்தை
தள்ளியே இருக்க சொன்னான்

காதருகே வந்தான்

கனிவாக பேசினான்

மோகத்திலே சிக்கி

முத்ததிலே  திக்கி

மோனையிலே மூன்றும்

முழுதாய் எதுகையிலே இரண்டும்

சந்திலே கொஞ்சம் மனச்

சஞ்சலத்தில் குழப்பி

கற்பனையை கொன்று

கனவுகளையே தின்று

நிஜத்திலே * நீராகரத்தோடு

நினைவில் வை மறந்து விடாதே

நினைவில் வை மறந்து விடாதே

 நிஜத்திலே * நீராகரத்தோடு

நித்தம் நீ பருகி வா ... வெகு

நேரத்திலே நீ தேறலாம் என்றான்

சம்பளத்தை சாயுங்காலம் வரும்போது வாங்கி கொள்வேன்

சற்று கவனத்தில் வை - அவள்

வளையல் உடைசல் வாடிய மலர்களை நான்

வரும் போது சேகரித்து வை என்றான்

கோபம் வருகிறது கொடும் கோபம் வருகிறது

குமரி என் காதலியின் நிழல் தொட்டால் கூட

நெருப்பாய் மாறி நான் நினைவையே அழிப்பேன்

நெடும் நேரந்தான் வஞ்சிக்கும் என் கனவு
கவிஞனை  எப்படி ஒழிப்பேன்  * பிறமொழிச் சொல்

கருத்துகள் இல்லை: