காதல் நோய் வந்தது
கவிஞன் மருத்துவனும் வந்தான்
கைபிடித்து நாடி பார்த்தான்
கன்னம் தொட்டு யோசித்தான்
நெற்றியிலே நீவிவிட்டு பின்
நினைவுகளை ஓட விட்டான்
இதயத்தின் மேல் மிருதுவாக
இன்பத்தை கொடுபதுபோலே
கூடிய குடும்ப கூட்டத்தை பார்த்து
கொஞ்சம் பக்கத்தில் வரச்சொன்னான்
கொடும் நோயின் தரம் சொன்னான்
தனிமை தேவை என்றான் கூட்டத்தை
தள்ளியே இருக்க சொன்னான்
காதருகே வந்தான்
கனிவாக பேசினான்
மோகத்திலே சிக்கி
முத்ததிலே திக்கி
மோனையிலே மூன்றும்
முழுதாய் எதுகையிலே இரண்டும்
சந்திலே கொஞ்சம் மனச்
சஞ்சலத்தில் குழப்பி
கற்பனையை கொன்று
கனவுகளையே தின்று
நிஜத்திலே * நீராகரத்தோடு
நினைவில் வை மறந்து விடாதே
நினைவில் வை மறந்து விடாதே
நிஜத்திலே * நீராகரத்தோடு
நித்தம் நீ பருகி வா ... வெகு
நேரத்திலே நீ தேறலாம் என்றான்
சம்பளத்தை சாயுங்காலம் வரும்போது வாங்கி கொள்வேன்
சற்று கவனத்தில் வை - அவள்
வளையல் உடைசல் வாடிய மலர்களை நான்
வரும் போது சேகரித்து வை என்றான்
கோபம் வருகிறது கொடும் கோபம் வருகிறது
குமரி என் காதலியின் நிழல் தொட்டால் கூட
நெருப்பாய் மாறி நான் நினைவையே அழிப்பேன்
நெடும் நேரந்தான் வஞ்சிக்கும் என் கனவு
கவிஞனை எப்படி ஒழிப்பேன் * பிறமொழிச் சொல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக