பக்கங்கள்

திங்கள், 25 அக்டோபர், 2010

சிரி

குழந்தை முன்னாள் நின்று
குரலால் சொற்களை கூட்டி
மொழிகளால் நகைசுவையாய் சொல்வீர்
முழிக்காதீர் நான் சொல்வதை கேட்டு

ஆறு மாத கைக்குழந்தை ஒன்று
அதற்கு புரியாது எந்த மொழியும்
அக்குழந்தை விழித்திருக்கும் போது
அழகாக நீங்கள் சிரித்தால்
பொக்கை வாய் திறந்து
புரிந்துதான் சிரிக்குமே காண்பீர்

என் கவிதை எழுதி வைத்தால் நண்பா
இதற்காக சிரிக்கணும் என்று
கோபம்தான் கொள்ளாதே நீயும்
கொஞ்சம்தான் சிந்திக்க வேண்டும்

யார் பார்த்து நாம்  சிரித்தாலும்
இதழ் காட்டி நட்பாய்தான் சிரிப்பர்
பயித்தியம் போல் அல்ல இதை படி
பழகிடு புன்னகை பூக்க

கவலைகள் கூவம் கடலில் கலக்கும் அது
கரைந்துதான் அலையென சிரிக்கும்
நீதான் துன்பத்தை சுமந்து
நெருப்பைத்தான் குமைகிறாய் என்று

கடுப்பாகி போனதால் மழையோ
காய்ந்துதான் விட்டது பாரு
செருப்படி கொடுத்துதான் தூக்கம்
சிவக்கின்ற கண்களால் புரண்டு புரண்டு
படுத்துதான் இதைப்படித்த பின்பும்
பார்ப்பாய என் நண்பனே சொல்லுடா

நகைச்சுவை நான் ஒன்று சொல்வேன்
நன்றாக சிரித்துடு நண்பனே
கவலைகள் நான் கொண்ட போது - என்
கவிதைகள் முதல் பரிசென வங்குமே
சிரித்திடு என் சிறந்த நண்பனே - இது
சீக்கிரம் நடக்காது என்றுதான்

ஓ........ஆஅ .... இ ஓ........ஆ ஆ...... அ...
இ ........இ .......ஆ ......ஓகோ.... அ ..... ஆஅ

கருத்துகள் இல்லை: