பக்கங்கள்

வியாழன், 21 அக்டோபர், 2010

தூக்கு மர நிழலில்

வெற்றி தூக்கு மரத்தில் தொங்குவதற்காக
தோல்வி கவலைகளை தூக்கிக்கொண்டு செல்கிறேன்


தமிழே தனி மரமாய் நீ இருந்தால் - உன்
தழையில் இதை எழுதி வைத்திடுவேன்
நீ கொடுக்கும் பிராண வாயுவால்
நிலைக்கின்ற  தமிழ் மக்கள் என்றுமே
செழிகின்ற நிலையிலோ சிங்களவன்
சிரிக்கின்றான் அதன் அர்த்தம் புரியலையா

இலையுதிர் காலங்கள் என்றுமே
இயற்கையாய் இருந்திடும் தொன்றுமே
மழை வரும் நேரத்தில் மகிழ்ச்சியாய்
மலர்களாய் குலுங்குவாய் உண்மையாய்

சிங்கங்கள் குகைகளில் வாழ
சீர் கெட்ட பிறவியால் முன்னர்
மார் திறந்து மதிகெட்ட பெண்ணாய்
மதம் பிடித்து சிங்கத்துடன் கூடி
பேர் பெற்ற சிங்களவன் பிதற்ற
பெருமை மிகு தமிழினமாம் புலம்பும்

காடினில் வளர்ந்திடும் புலியை
கற்பு வன்மையால் முறத்தினால் புடைத்து
சீர் பெற்ற நங்கைகள் எம் தங்கை
சிவக்கின்ற கன்னத்தில் பெண்மை
சோழனோ புலிக்கொடி பொரித்து
சொல்லிவிட்டான் வீரத்தை இமயத்தில்
காடென செழித்துடுவாய் நீ
கரும் புலிகளை வளர்திடுவாயே

நேரம்தான் மாறாதென
நெஞ்ச திமிரினால் கூறுகின்றான் பட்சே
ஆங்கிலத்தின் அடிமையினாலே
ஆட்சி செய்யும் பிரிவினை கொள்கையாலே
தமிழ் எழுத்தும் ஆங்கில எழுத்துமாக
தடுமாறும் ஒற்றுமையாலே
கட்சிகள் சேராதென
கை கொட்டி சிரிக்கின்றானே

தூக்கு மரம் நீயாய் மாறு - என்
துயரங்கள் நீங்குவதற்கு பின்
காடென வளர்ந்திடுவாய் புது
நாடென மலர்ந்திடுவாய்

கருத்துகள் இல்லை: