பக்கங்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

அவினாசி ஆரியமே ..............

அன்றொரு நாள் அவினாசியில் நான்
அலைகின்ற பொது எதிரில் வந்தாய்
கருணாம்பிகை கோவிலுக்கு செல்ல
கடைசியில் மனது தியானத்தில் நுழைந்தது

சிலம்பம் தன்னில் என் விரல்கள் சுற்ற
சிவந்த இரத்தம் கையில் ஒழுக நானோ
சோமனூரில் குருவின் அடியில் அப்போது
சொல்லாத வலியை மறந்து விட்டேன்

செவ்வாய் இன்று காத்திருந்து
செல்லும் கராத்தே பொறுத்திருந்து
தொடைகள் மீது இடிகள்  வாங்கி இன்று
தொடர்ந்த அடிகள் தெக்கலூரில் இனிக்கும்

கணிபொறி வகுப்பிற்கு செல்வதற்கு
கருமத்தம் பட்டியை தேர்வு செய்து
அவினாசி என்னை அழைக்கும்போது
அப்படிதானே இன்று வந்தேன்

முதல் நாள் வகுப்பில் மாணவனானேன்
மறு நாள் வகுப்பில் ஆசிரியனானேன்
கணணி அனுபவத்தில் காலம் என்னை மாற்றி
காசுக்காக கடமை என்னை சுற்றியது

முந்தி கொண்ட மாணவி நீயாய்
மூச்சு நிற்கும் ஆரியத்தின் சேயாய்
தாவணி தவிர்த்த நவீன அலங்காரத்தில்
தங்க தேராய் என் முன்னால் வந்தாய்

தியானம் பழகு தினமும் இறைவன் ஒழுகு
மயானம் செல்லும்வரை மாற்றாதே பண்பு
விவேகானந்தனும் ஓஷோவும் விளக்கிய வழியில்
விட்டா நகர்வேன் உன்னை உதறி ......

கருணாம்பிகை கோயிலுக்கு சென்றேன்
கண் மூடி தியானத்தில் நுழைந்தேன்
வரும் போது உருத்திராட்சை வாங்கி
வலது கையிலும் கட்டி கொண்டேன்

அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தாய்
அடிப்படை கணினியின் ஆசிரியன் நானோ
அழகே உன்னை மனதினால் தவிர்த்து
இகழா கண்ணினால் என் வகுப்பை தொடர்ந்தேன்

வளையல் ஓசை உனது தாளம் தட்ட
அலையும் காகிதம் குறிப்பேடு அடிகள் எடுக்க
கொலுசு சத்தம் குலுங்கி சிரிக்க
குறும்பாய் நீயோ என் பெயரை பழித்தாய்

காதல் வந்து இதய கதவை தட்ட
கனவு வந்து உயிர் பூட்டை யுடைக்க
இருண்ட வாழ்க்கை திரண்டு ஒழிக்க
என்னை ஏனடி எரிக்க வந்தாய்

பார்த்தவுடனே பளீரென சொன்னாய்
பள்ளி பெண்ணானாலும் தைரியமாய் கொன்னாய்
ஆசிரியன் முறையால் நான் அறம் பிறழாமல்
ஆரிய பெண்ணை உன்னை மறுத்தேனே

மறுநாள் நானோ மனதினால் செத்து
மாற்றலாகி நான் ஓடி வந்து விட்டேன் என்
தடம் பார்த்து நீ வந்தால் புரியும்  நான்
தவிர்த்தது உன்னை மறந்து எதனால் தெரியும்
தலைமை நீதி மன்றத்தின் நீதியும் அறியும்  .

கருத்துகள் இல்லை: