பக்கங்கள்

திங்கள், 27 டிசம்பர், 2010

கடவுள் தேடுவதை நிறுத்திக்கொண்டேன்

பரம் பொருள் பரம் பொருள் என்று
பசி எடுக்கும் வரை கேவி கொண்டிருந்தேன்

பரிந்து கொடு பொருள் பரிந்து கொடு பொருள் என்று
பணியில் இருந்து கொண்டு கேட்கின்றேன்

கர்மயோகத்தின் கடவுள் கருணை காட்டுகின்றார்
கடைசி தேதிக்கு பின் முதல் தேதியில் சம்பளத்தோடு
வணங்கிய  என் கை அப்போதே வயிற்றை தடவி வாழ்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டபோது

என்னுடைய கடவுள் எல்லோருக்கும் காட்சியளிப்பார்
இப்போதே கைகூப்புங்கள் கர்மத்தில்
என்று மட்டும் என்னால் கூற முடியும்

கருத்துகள் இல்லை: