பக்கங்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010

அதிகாலை சூரியன் என் கவிதை திருடினால் ?

பௌர்ணமி  நீ .............
அமாவாசை நிலவுக்கு
அதி காலை சூரியன்
எழுதிய கவிதையை
நான் திருடி விட்டேனாம்!

அழுது கொண்டிருந்தது
என்னிடம் அது இரவில்

நான் அதை சமாதானம் செய்தேன்
நாளைக்கு நீ கவிதை எழுது
நான் கவிதை எழுதாமல்
என் காதலியை உன் கவிதை
பார்க்க சொல்கிறேன் என்றேன்

பிறை நிலவு சிவந்து கொள்கிறதாம்
பெண்ணொருத்தி நாணம் போல
சூரியன் எழுதிய கவிதையை
இன்று நான் சொல்லிகொண்டேன்
நான் எழுதிய கவிதை எது

கருத்துகள் இல்லை: