மணிபுறா சூறை புதரில் கூடுகட்ட
மறைந்திருந்து இருமுட்டை கண்டுவிட்டு
தினம் சென்று பனை மரத்தில் கல்லெறிந்து
திடுகிட்ட புறா பறக்க முட்டை பார்த்து
இருபது நாளுக்கு மேலாய் இதை தொடர்ந்து
இன்னுமா குஞ்சு பொரிக்க வில்லை ஐயம் வர
ஓடிச்சென்று அம்மாவிடம் இதைகேட்க
ஒன்றுமறியா பிள்ளையெனக்கு என்ன சொல்வாள்
யோசித்தால் கூழைமுட்டை ஆகியிருக்கும்
உணரனுமாம் முட்டை தாய் சூட்டை தொடர்ந்து
ஆறிப்போன சூட்டால் முட்டை ஐயோ பாவம்
ஆறறிவு குழந்தை எனக்கு புரியவில்லை
அடுத்தமுறை சூறை புதருக்கு செல்லவேண்டாம்
அங்குதான் கண்கொத்தி பாம்பிருக்கு
மிரட்டி வைத்த பயத்தால் நான் செல்ல வில்லை
மீண்டும் புறா சவுக்கு கன்னில் முட்டையிட
தூரத்தில் பார்க்கும்போது தூங்கி கொண்ட
துறுதுறுத்த என்கண்ணில் புறா கனவு வர
அம்மாவிடம் சொல்லலாமா மனசு அலை பாய
அறுவடையில் இருந்த அவள் அருகில் செல்ல
கதிரறுத்த மெனைகளில்தான் காடை முட்டை கண்டு
கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்தாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக