பக்கங்கள்

சனி, 25 டிசம்பர், 2010

தாய்மை

மணிபுறா சூறை புதரில் கூடுகட்ட

மறைந்திருந்து இருமுட்டை கண்டுவிட்டு

தினம் சென்று பனை மரத்தில் கல்லெறிந்து

திடுகிட்ட புறா பறக்க முட்டை பார்த்து

இருபது நாளுக்கு மேலாய் இதை தொடர்ந்து

இன்னுமா குஞ்சு பொரிக்க வில்லை ஐயம் வர

ஓடிச்சென்று அம்மாவிடம் இதைகேட்க

ஒன்றுமறியா பிள்ளையெனக்கு என்ன சொல்வாள்

யோசித்தால் கூழைமுட்டை ஆகியிருக்கும்

உணரனுமாம் முட்டை தாய் சூட்டை தொடர்ந்து

ஆறிப்போன சூட்டால் முட்டை ஐயோ பாவம்

ஆறறிவு குழந்தை எனக்கு புரியவில்லை

அடுத்தமுறை சூறை புதருக்கு செல்லவேண்டாம்

அங்குதான் கண்கொத்தி பாம்பிருக்கு

மிரட்டி வைத்த பயத்தால் நான் செல்ல வில்லை

மீண்டும் புறா சவுக்கு கன்னில் முட்டையிட

தூரத்தில் பார்க்கும்போது தூங்கி கொண்ட

துறுதுறுத்த என்கண்ணில் புறா கனவு வர

அம்மாவிடம் சொல்லலாமா மனசு அலை பாய

அறுவடையில் இருந்த அவள் அருகில் செல்ல

கதிரறுத்த மெனைகளில்தான் காடை முட்டை கண்டு

கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்தாள்

கருத்துகள் இல்லை: