ஒரு புள்ளியாய், இறுதி புள்ளியாய்
காதலுக்கும் உலகத்திற்கும்
கடவுள் வைத்துவிட்டான்
தொடர் புள்ளியாய் துவங்கி
இன்னொரு புள்ளியாய் இன்று
காதலர்கள் வைக்க .................
இறைவன் எழுதி விட்டான்
இவ்வுலக விதியினை
முடிவு புள்ளி எப்போது ?
முடியும் போது அப்போது !
உலகம் அழியும் இது தப்பாது,
உண்மை புரியும் உனக்கு இப்போது.
எந்தன் புள்ளியொன்று வைக்கும்போது ,
உங்கள் புள்ளியினை வைத்திடுவீர் !
உலகம் அழியாதென உணர்ந்திடுவீர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக