பக்கங்கள்

திங்கள், 29 நவம்பர், 2010

காதலி தெரியுமா உனக்கு ?

நீ நடந்து போகும் காலடி வழியே ,
நான் கடந்து போகும் போதுதான்
உன்  காலடி இனிப்பில் உணவருந்தும் எறும்பு
உரக்க உயிர் விடும் போது சொன்னது
என் காலடி பட்டு நசுங்கி
இன்று நான் நாளை நீ !


அப்போது தெரியவில்லை அதன் மொழி
இப்போது புரிந்து போகிறது
கல்லறை தனிமையில் கைநீட்டி என்னிடம் அந்த
 எறும்பு சொல்வதால்
இனிக்க வாய்த்த உன் காலடியும்
என் இதயம் துடிக்க வாய்த்த இறுதிஉன்  சொல்லடியும்
இரு உயிர்களை பறித்து விட்டதடி

கருத்துகள் இல்லை: