பக்கங்கள்

புதன், 17 நவம்பர், 2010

நலம் பெற என் கவிதை

அரிசி சோறு முதல்வேளை
அரைத்த கேழ்வரகு மறுவேளை
இரவு மட்டும் சில பழங்கள்
இனிப்பாக சேர்த்துகொள்

முதல் நாள் கடலை எண்ணெய்
மூன்றாம் நாள் நல்லெண்ணெய்
இரண்டாம் நாள் சூரியகாந்தி எண்ணெய்
இப்படி மாற்றி நீ சமையலுக்கு பயன்படுத்து

முளை கட்டிய பயறு வகை
முற்றாத தேங்காயுடன்
அரை வேக்காட்டில் வேகவைத்து
அளவோடு சாப்பிட்டுகொல்

தேன்துளிகள் சில சொட்டு
ஊணுக்குள் நீ விட்டு
காலை மட்டும் சீக்கிரமாய்
கடமையென எழுந்துகொள்

பொரித்த உணவு கொரிக்கயிலே
எரித்த கொழுப்பு மிஞ்சுமென்று
வயறு உன்னை கெஞ்சயிலே
வாயை மட்டும் மூடிகொள்

பூச்சி மருந்து காய்கறிகள்
பொடிசாக அரிந்து நீ
நெடும் நேரம் கொதிக்க வைத்தால்
நீடூழியா வாழ முடியும்

உமிழ் நீரில் ஊறவைத்து
உன் உணவை அரைத்து நீ
சிறுக சிறுக விழுங்கிவிடு அந்நேரம்
சிந்தனையில் தூயதையும் சேர்த்துவிடு

காக்கவிற்கு சிறு உணவை
மேம்போக்காக வைப்பதெல்லாம்
சாத்திரமென்று நினைக்காதே - தன்
சாவுகஞ்சிய சிறு செயல்தான் நீ யோசி


துரித உணவுகளை நீ துரத்த
எளிய வழிகள் இன்னொன்று
பச்சை உணவுகள் சிலவற்றை நீ
பறக்கும் போதும் உண்டிடலாம்



தேநீரை இடைவெளியில்
தேக்கித்தான் வைத்தால்தான்
சுறுசுறுப்பு கூடுமென்றால்
சொன்ன வார்த்தை பலிக்குமென்றால்

மலையெல்லாம் சோம்பேறியாக
மழையில் ஏன் குளிர்வதென்ன- நீ
மட்டும் இதை புரிந்து நிம்மதியாக காபி
போட்டு  குடிப்பதையும் நிறுத்திகொள்

என் கைகள் அடித்ததெல்லாம்
எந்திர விசைபலகை கேட்கும்போது
எழுத்தில் எப்படி பிழை வரும்
என்னருமை நண்பா நீ யோசி ?

என் கவிதை இது இல்லை
உங்கள் வாழ்க்கை திருடியதால்
உருவான எண்ணம் இது
உணர்வாயா உற்ற தோழனே !

கருத்துகள் இல்லை: