பக்கங்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

பேசாதே ?

மாற்று திறனாளிகள் என்னை மன்னியுங்கள் - உம்
மனம் நோக எழுததான் நான் மனிதனில்லை
மற்ற மொழி மெச்சுகின்ற தமிழன்தான்
மன்னிக்க முடியாதென்ற பிறப்பை நொந்து
இன்மொழியை பழித்திட்ட இவரெல்லாம்
இன்னொரு பிறவியில் ஊமையராய் பிறக்க வேண்டும்

உமை கண்டு நான் எழுதிய கவிதை கண்டு
உண்மையுணர்ந்தால் நன்றியுரைப்பேன் மாற்று என் தோழனே
வரம் ஒன்று கிடைத்துவிட்டால் என் வாழும் தமிழுக்கு
வழக்கமாக இதை நான் செய்திடுவேன்

ஊனமென்றும்  ஊமையென்றும்   உற்ற தோழனே
உன்னை நான் பழிக்கவில்லை என்னை மன்னியுங்கள்
தமிழ் மொழியினை நேசிக்கின்ற தலைமகனாய்
தவறாமல் உனக்காக நான் பேசிடுவேன்
நம் மொழியை உணர்ந்துதான் நண்பர்களாய்
நன்றியோடு தோள் சேர்வோம் வாருங்களேன்

கருத்துகள் இல்லை: