பக்கங்கள்

புதன், 3 நவம்பர், 2010

யாருமில்லை ?

பங்கீட்டு உந்துவாம்
பட்டணத்தில் செல்லும்போது நான்
ஏமாற்றதே என்னிடம்
இவ்வளவு சிறிய தூரத்திற்கு
ஏன் இந்த அநியாய  விலை என்றேன்

இளம் பெண்களை
இடித்து வந்ததற்கும் சேர்த்துதான்
இந்த விலை என்றான் ஏளனமாய் !

அரசியலாட்சி கொண்டுவந்த
அவல நிலை கண்டு
என் குல பெண்களின் மானமெல்லாம்
இவ்வளவு விரைவில் விலைபோகுமென்று
ஒரு நாளும் நினைத்ததில்லை
உதவாக்கரை என் போல் யாருமில்லை ?

கருத்துகள் இல்லை: