பக்கங்கள்

சனி, 13 நவம்பர், 2010

மனித நீதி

நீதியை தூக்கு மாட்டி
நிறையை அதன் தட்டில் வைத்தால்
குறையா குற்றமெல்லாம்
கூடுது அதன் தொண்டை வரை
தலைதான் எழுத்தாய் மாறி
தண்ணீரில் போட்ட கோலமென
விதிதான் வேடிக்கை பார்க்கும்
வேதனையை என்னில் தேக்கும்
தராசில் தொங்கும் நீதி
தமிழென்று உயிரை விட
எந்திர இதயம் இன்று
எப்படித்தான் ஈழ எடையை போடும்

கருத்துகள் இல்லை: