பக்கங்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

தோழியா ,காதலியா ?

தோழா வாடா உன்
தோளை தாடா
விண்ணை நான் பிடிக்க
விரையும் படியாய்
நில்லடா நண்பனே
நேர்வழியை சொல்லடா

பெண்ணொருத்தி பழகிவிட்டேன்
பெயரென்று நட்பானேன்
கண்ணை உருத்தி தூக்கமில்லை
காதல் என்றா புரியவில்லை
இரண்டொரு நாள் பேசவில்லை
எனக்குள்ளே போராட்டம்
திரண்டொரு திசைகள் புரியவில்லை
திரும்புமா இயல்பு நிலை தெரியவில்லை

தோழியின் தோளோடு
தோல்வியுறும் நட்போடு
கனவுகளின் காலோடு
கற்பனையின் வழியோடு
செல்லுகின்ற பயணத்தோடு
சேர்வது காதாலா ?

விடுமுறை எடுத்து வீட்டிலிருந்தேன்
வெளியூர் செல்வதாய் சொல்லியிருந்தேன்
தொடுமுறை நினைவுகளில் தொலைந்திருந்தேன்
தோழியாய் காதலியா உரைத்திடுவாய்

கவிதைகள் அவளைப்பற்றி வருகிறதா
கற்பனை குழந்தைகள் பிறக்கிறதா
வானவில் அவள் மேனியில் தெரிகிறதா
வாழ்க்கைதான் அவளென்று புரிகிறதா

நடக்கும் அவள் மண் உனக்கு குளிர்கிறதா
நண்பன் என்றால் உனக்கு வலிக்கிறதா
அவள் சடை உனக்காக முடிக்கிறதா
அவள் உடை உனக்காக பிடிக்கிறதா

கை பேசி உனக்காக அடிக்கிறதா
காலை உன் தூக்கம் கெடுக்கிறதா
குறும் செய்தி உனக்காக கொடுக்கிறதா
குறும்பாக இல்லாமல் அது பழிக்கிறதா

காமம்தான் இதனோடு நட்பானால்
காதல்தான் பிறக்கின்ற முடிவாகும்
உன்னோடு இருப்பவை மேலுள்ளவையா
உற்ற நண்பனே யோசிப்பாயடா

நட்போடும் நட்போடும் அன்பு உண்டு
நண்பனுக்கும்  தோழிக்கும் கொஞ்சம் கண்டு
காமம்தான் கள்ளத்தனம் செய்வதுண்டு
கற்புதான் உள்ளம் மட்டும் மிஞ்ச கண்டு
காதல்தான் தோற்குமடா நட்பை கண்டு

கற்பனைகள் கவிதைகள் இல்லையென்றால்
கலங்காதே என் செல்ல நண்பனே
உன் நட்பும் புனித நட்பும் ஒன்றாகும்
உன் தோழி நட்பும் அதனால் நன்றாகும்

கருத்துகள் இல்லை: