கார்த்திகை தீபமன்று
கன்னி நீ கட்டி கொண்டாய்
தாவணி பாவடையை
தமிழனின் மரபென்று
அங்கு நான் வந்திருந்தேன்
அரைக்கால் சட்டையுடன்
என்னை நீ பார்த்திருந்தாய்
எண்ணெய் நீ ஊற்றுகின்றாய்
அகல் விளக்கு திரிகளெல்லாம்
அழகாய் தான் எரியவைத்தாய்
இன்னும் ஒரு விளக்கு குறைய
என்னிடம் கேட்கின்றாய்
கண்கள் தான் சத்தமிட
கன்னங்கள் சிவந்து விட
உதடு மட்டும் உயிரெடுத்து
உண்மையாக மௌனிக்க
பின்னிருந்து அழைப்பதெல்லாம்
பெரியண்ணன் எனத்தெரிந்து
அகல் விளக்கு எடுத்துவர
அகலுகின்றாய் அங்கிருந்து
இதய விளக்கு என்னோடு
எரியாத புதிரோடு
புரியாத கோலமென்று
போய்வருவேன் என்று சொன்னேன்
வேட்டி கட்டி சட்டை மாட்டி
வேகமாக உன் வேட்டை காண
நான் வந்த நேரத்தில் அகல் விளக்கு
நன்றாய்த்தான் எரியுது பின்னே
நீ ஏற்றி வைத்த அகல் விளக்கு
நிக்காமல் எரிய கண்டு எனக்கு
புகை போகும் காது வழியில்
புரியாது கனவின் விழியில்
இங்கு நீ எப்போது வருவாய்
என் வீட்டில் காத்து கிடக்க
கனவு வீடு இருண்டு கிடக்கும்
கன்னி கார்த்திகைக்கும் காத்து கிடக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக